இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: விசாரணை வேட்டை தீவிரம்!

  • February 14, 2026
  • 0 Comments

தென்னிலங்கையில் சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை வேட்டை இடம்பெற்றுவருகின்றது. இதற்காக 10 விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) மாலை 5 மணியளவிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது. அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து, காரில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த குற்றச் செயலை புரிந்துள்ளனர். ஜீப் வாகனத்தின் இருந்த சட்டத்தரணியையும் அவரது மனைவிமீதும் துப்பாக்கிச்சூடு […]

இலங்கை செய்தி

உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து!

  • February 14, 2026
  • 0 Comments

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச் சலுகையைத் தொடர்வதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை சரியான நேரத்தில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம்–இலங்கை கூட்டு ஆணையம் 27வது அமர்வு கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றபோது இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது. ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தின் கீழ் உள்ள 27 முக்கிய சர்வதேச உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதில் தமது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவற்றின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு காலமுறைப்படி […]

அரசியல் இலங்கை செய்தி

அறகலயவுக்கு ராஜபக்சக்களே ஆரம்பபுள்ளி வைப்பு!

  • February 14, 2026
  • 0 Comments

அமைதியாக நடந்த அறகலயமீது தாக்குதல் நடத்தி குழப்பம் ஏற்படுவதற்கு ராஜபக்ச தரப்பே ஆரம்பபுள்ளி வைத்தது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க Wasantha Samarasinghe தெரிவித்தார். “ அமைதியாக நடைபெற்ற போராட்டம்மீது ராஜபக்ச தரப்பு தாக்குதல் நடத்தியதாலேயே அறகலய வெடித்தது. எனவே, குழப்பம் ஏற்பட்ட பின்னர் நடந்த சம்பவங்களைபோன்ற, அதற்கு முன்னர் இடம்பெற்றவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும். எவரேனும் குற்றம் இழைத்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கும். அது தொடர்பில் பிரச்சினை இருந்தால் மேன்முறையீடு செய்யலாம். நீதிமன்றத்தில் இருக்கும் […]

இந்தியா

டெல்லியுடன் உறவை வலுப்படுத்த டாக்கா பச்சைக்கொடி!

  • February 14, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பங்களாதேஷ் தேசியவாத கட்சி Bangladesh Nationalist Party நன்றி தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் தேர்தல் முடிவுகளை அங்கீகரித்ததற்காகவும், தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகமே தேர்தலில் வென்ற கட்சி இவ்வாறு நன்றி கூறியுள்ளது. பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 299 இடங்களில், பங்களாதேஷ் தேசியவாத கட்சி BNP தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு Tariq Rahman வாழ்த்துகள் […]

செய்தி

ICC World Cup: இன்று நடைபெறும் மும்முனைச் சமர்!

  • February 14, 2026
  • 0 Comments

ICC World Cup தொடரில் இன்று (17 ) மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. Colombo (SSC) மைதானத்தில் நடைபெறும் 22 ஆவது லீக் ஆட்டத்தில் Ireland மற்றும் Oman அணிகள் மோதுகின்றன. தங்களின் பிரிவில் முன்னிலைப் பெற இரு அணிகளும் வெற்றியை கட்டாயமாக குறிவைத்து களமிறங்குகின்றன. கொல்கத்தா Eden Gardens இல் நடைபெறும் அடுத்த 23 ஆவது லீக் ஆட்டத்தில் England மற்றும் Scotland அணிகள் பலத்த சவாலை ஏற்படுத்துகின்றன. அனுபவம் வாய்ந்த இங்கிலாந்தை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவை உலுக்கியுள்ள சம்பவம்: சுயாதீன விசாரணை கோரும் அமைப்புகள்!

  • February 14, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஜனாதிபதியின் Isaac Herzog வருகைக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் போராட்டக்காரர்களை காவல்துறை அப்புறப்படுத்திய சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் Anthony Albanese தனது கவலையை வெளிப்படுத்தியதுடன், சம்பவம் குறித்து காவல்துறை தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை மக்களுக்கு இருந்தாலும், காவல்துறையின் ஆலோசனைகளை ஏற்பாட்டாளர்கள் பின்பற்றாதது […]

அரசியல் இலங்கை செய்தி

அறகலய தொடர்பில் எங்கள் ஆட்சியில் உயர்மட்ட விசாரணை: நாமல் திட்டவட்டம்!

  • February 14, 2026
  • 0 Comments

“ அறகலய தொடர்பிலும், அதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் மற்றும் பின்புலம் தொடர்பில் எமது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். “நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மறுபுறத்தில் தாம் கூறியது பொய் என்பது அம்பலமாகி வருகின்றது. ஆளுங்கட்சிக்குள் நடக்கும் ஊழல்களும் வெளிவருகின்றன. எனவே, தமது இருப்பைக்காக்க அரசாங்கம் அடக்குமுறையை பயன்படுத்துகின்றது.”- எனவும் […]

விளையாட்டு

கொழும்பில் நாளை ‘கிரிக்கெட் போர்’!

  • February 14, 2026
  • 0 Comments

  T-20 உலகக்கிண்ண தொடர்பில் பங்கேற்கவுள்ள இந்திய அணி India இலங்கை வந்துள்ளது. T-20 உலகக்கிண்ண தொடர்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் Pakistan அணிகள் மோதும் – ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்க்கும் போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச Colombo (RPS) மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். உலக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாடு அறிவித்திருந்தது. எனினும், இலங்கை முன்னெடுத்த இராஜதந்திர நகர்வுகளால் போட்டியில் […]

அரசியல் இலங்கை செய்தி

“நாடாளுமன்றத்தை கொளுத்தவந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை அவசியம்”

  • February 13, 2026
  • 0 Comments

அரகலயவின்போது நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் S.M. Marikar வலியுறுத்தினார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, “நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை கொலை செய்த நபர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்க திட்டம்: விமல் சீற்றம்!

  • February 13, 2026
  • 0 Comments

“காங்கேசன்துறை kankesanthurai harbour மற்றும் திருகோணமலை Trincomalee Harbour துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இது தேசத்துரோக நடவடிக்கையாகும்.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் National Freedom Front தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச Wimal Weerawansa தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதியும் அங்கு செல்கின்றார். இலங்கையிலுள்ள கனிம வளங்களை இந்திய […]

error: Content is protected !!