வவுனியாவில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு: விசாரணை தீவிரம்!
வவுனியாVavuniya , ஈரற்பெரியகுளம் பகுதியில் மயானம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பது தொடர்பாக இன்று காலை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலின் ஒரு பகுதி தீயினால் எரிந்த நிலையில் காணப்படுவதுடன், […]













