சந்தேக நபரின் படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ட்ரம்ப்!
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான காட்சிகள் மற்றும் சந்தேக நபரின் புகைப்படம் என்பவற்றை தனது சமூகவலைத்தள பக்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சங்க விழாவின்போதே இப்பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
“உண்மை நிலவரத்தை மக்கள் அறிய வேண்டும்” என்ற நோக்கத்தில் இந்த ஆதாரங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளேன்.” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சந்தேக நபர் பொலிஸ் கண்காணிப்பின்கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். அவருக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.




