அரசியல் இலங்கை செய்தி

“புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நிதியை மக்களுக்காக பயன்படுத்துக”

  • April 17, 2026
  • 0 Comments

“பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என அரசு எண்ணக்கூடாது. புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு எட்டப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கு வளமான எதிர்காலம் அமையும்” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ITAK மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் Gnanamuthu Srinesan தெரிவித்தார். மட்டக்களப்பு, செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் (ஜனா) 40 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட ‘ஜனா […]

இலங்கை செய்தி

தமிழ்க் கட்சிகளின் சங்கமத்தை தடுக்கும் புல்லுருவிகள்: சாணக்கியன் சீற்றம்!

  • April 17, 2026
  • 0 Comments

தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை, சில அரசியல் புல்லுருவிகள் தங்களது சுயநல சுகபோகத்துக்காகத் தடுத்து வருகின்றனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சாடியுள்ளார். மட்டக்களப்பு, துறைநீலாவணையில் நடைபெற்ற ‘யுனைட்டெட்’ விளையாட்டுக் கழகத்தின் சித்திரை விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்; “தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், […]

இலங்கை செய்தி

14 இந்திய மீனவர்களுக்கு 22 ஆம் திகதி வரை விளக்கமறியல்

  • April 17, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மன்னார் வடக்கு, இரணைதீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த நிலையில், கடந்த 9ஆம் திகதி 10 மீனவர்களும், அதனைத் தொடர்ந்து 14ஆம் திகதி 4 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இவர்களிடமிருந்து இரண்டு படகுகளும் […]

இலங்கை செய்தி

தையிட்டி காணி அளவீடு மே 15ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

  • April 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம்-வலிகாமம் வடக்கு, தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள பொது மக்களின் காணிகளை அளவீடு செய்யும் பணிகள், விகாராதிபதியின் எதிர்ப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களால் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தையிட்டி விகாரையைச் சூழவுள்ள 17 காணி உரிமையாளர்களின் காணிகளை இன்று வெள்ளிக்கிழமை அளவீடு செய்வதற்கு, கடந்த 11 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக இணங்குமாறு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் யாழ். […]

அரசியல் இலங்கை செய்தி

திடீர் பதவி விலகலுக்கு காரணம் என்ன? வெளியானது பின்புலம்!

  • April 17, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று (17) கையளித்து, பதவி விலகியுள்ளனர். நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையிலேயே அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று இன்று நியமிக்கப்பட்டது. இந்நிலையிலேயே […]

அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் பரபரப்பு: வலுசக்தி அமைச்சர் ராஜினாமா!

  • April 17, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. நிலக்கரி இறக்குமதி தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையிலேயே இவர்கள் பதவி விலகியுள்ளனர் என தெரியவருகின்றது. நிலக்கரி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இது தொடர்பில் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகூட முன்வைக்கப்பட்டது. அப்பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் பதவி விலகியுள்ளனர்.

உலகம் செய்தி

லெபனான் போர் நிறுத்தம்: ட்ரப்பை போற்றி புகழ்கிறது பாகிஸ்தான்!

  • April 17, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் Shehbaz Sharif வரவேற்றுள்ளார். குறித்த நடவடிக்கை அப்பகுதியில் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட துணிச்சலான இராஜதந்திர முயற்சிகளால் இந்த அமைதி உடன்படிக்கை சாத்தியமானதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு பாகிஸ்தான் தனது முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடி பேச்சுவார்த்தைகளை […]

இலங்கை செய்தி

யாழில் தாக்குதல் முறியடிப்பு: வாள்களுடன் மூவர் கைது!

  • April 17, 2026
  • 0 Comments

யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவமொன்றை சுன்னாகம் பொலிஸார் முறியடித்துள்ளனர். அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வன்முறை கும்பல் தயாராகிக்கொண்டிருப்பதாக சுன்னாகம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை தாமதிப்பது பெரும் அநீதி!

  • April 17, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தொடரும் தாமதம் வாக்காளர்களுக்கும், வருங்கால பிரதிநிதிகளுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.” இவ்வாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னதாக, தெரிவுக் குழுவின் செயல்முறையின் முடிவுகளுக்காக ஆணைக்குழு காத்திருக்கிறது. தெரிவுக் குழுவின் முடிவின் அடிப்படையிலேயே, தேர்தல்களை நடத்துவது குறித்து எங்களால் தீர்மானிக்க முடியும். எல்லை நிர்ணய ஆணைக்குழுவும், தெரிவுக்குழுவின் முன் […]

உலகம் செய்தி

“அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பாகிஸ்தான் செல்வேன்” – ட்ரம்ப்

  • April 17, 2026
  • 0 Comments

“ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்படுமானால் நான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வேன்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இது தொடர்பில் வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் கூறியவை வருமாறு, “ஈரான் உடனான அமைதிப் பேச்சு சுமுகமாக உள்ளது. இதன் முன்னேற்றம் நேர்மறையாக அமைந்துள்ளது. கூடிய விரைவில் இரண்டு தரப்புக்கும் இடையிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அது நடந்தால் நான் செல்லக்கூடும். அங்கு நான் இருக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் […]