தொடரும் சிறைக் கலவரங்கள் – இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும்?
இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் அவசர சீர்திருத்தங்கள் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். மஹாரா சிறைச்சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் ஒரு தனிப்பட்ட சம்பவத்தை விட ஆழமான ‘நிறுவன ரீதியான தோல்விகளையே’ பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நீர்கொழும்பு சிறைக் கலவரம் இடம்பெற்ற சில வாரங்களுக்குள் மற்றொரு […]



