இலங்கை செய்தி

இளவாலையில் போதைப்பொருளுடன் கைதான இளைஞரிடமிருந்து திருட்டு நகைகள் மீட்பு!

  • March 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடியமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து 4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுத் […]

இலங்கை செய்தி

கொழும்பிலிருந்து யாழுக்கு போதைப்பொருள் கடத்திய ஆணும், பெண்ணும் கைது!

  • March 10, 2026
  • 0 Comments

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப்பொருட்களை கடத்திச்சென்று விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் , 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனையில் ஆண் , பெண் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரின் உடைமையில் இருந்து போதைப்பொருட்களை மீட்ட நிலையில், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , கொழும்பில் உள்ள போதைப்பொருள் […]

இலங்கை செய்தி

பள்ளி வாசலுக்குள் வாளுடன் புகுந்த இளைஞனால் யாழில் பரபரப்பு!

  • March 10, 2026
  • 0 Comments

யாழிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றிரவு தொழுகை இடம்பெறும்போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை இடம்பெற்றது. இதன்போது வாளேந்திய நபர் ஒருவர் இன்னொரு இளைஞரை துரத்திக்கொண்டு சென்றவேளை குறித்த இளைஞன் பள்ளிவாசலுக்குள் புகுந்து, அங்குள்ள மதிலில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இதன்போது வாளுடன் வந்த சந்தேகநபர், பள்ளிவாசலில் இருந்த இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, வாள் பறிமுதல் செய்யப்பட்டது. […]

உலகம் செய்தி

போரின் முடிவு எங்கள் கையில்: ஈரான் பதிலடி!

  • March 10, 2026
  • 0 Comments

“போரின் முடிவை நாங்களே தீர்மானிப்போம்.” என்று , ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள் தான.  பிராந்தியத்தின் சமன்பாடுகளும் எதிர்கால நிலையும் இப்போது நமது ஆயுத படைகளின் கைகளில் உள்ளன. அமெரிக்கப் படைகள் போரை முடிவுக்குக் கொண்டுவராது.” […]

உலகம் செய்தி

போர் விரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் நம்பிக்கை!

  • March 10, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன், அவர்களது தலைமை உட்பட அவர்களிடம் உள்ள அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.” எனவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். ஹார்முஸ் நீரினை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, “ ஈரான் Iran அதுபோன்ற செயல்களில் […]

ஆஸ்திரேலியா உலகம்

ஈரான் வீராங்கனைகளுக்கு புகலிடம் வழங்கியது ஆஸ்திரேலியா!

  • March 10, 2026
  • 0 Comments

ஈரானின் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கணைகளுக்கு ஆஸ்திரேலியா Australia புகலிடம் வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சரை, வீராங்கணைகள் நேற்றிரவு சந்தித்துள்ளனர். இதன்போது உரிய ஆவணங்களில் ஆவணங்களிடம் கைச்சாத்திடப்பட்டு, மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கணைகளுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா அடைக்காலம் வழங்காதபட்சத்தில் தமது நாடு அவர்களை பொறுப்பேற்கும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை செய்தி

மே தினக் கூட்டத்தை கைவிடுகிறது மொட்டு கட்சி!

  • March 10, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி இம்முறை மே முதலாம் திகதி மேதினக் கூட்டம், பேரணியை என்பவற்றை நடத்தாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “மே முதலாம் திகதி இம்முறை பூரணை தினம் வருகின்றது. எனவே, அன்றைய நாளில் கட்சியால் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படமாட்டாது. எனினும்,மக்கள் கூட்டம் மற்றும் பேரணி பிரிதொரு நாளில் நிச்சயம் நடத்தப்படும். மக்கள் ஆதரவு இல்லை […]

உலகம் செய்தி

11 ஆவது நாளாக தொடரும் போர்: வளைகுடா நாடுகளுக்கு ஆஸ்திரேலியா இராணுவ உதவி!

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் 11 ஆவது நாடாக நீடிக்கும் நிலையில், அப்போர் உலகளவிலும் தாக்கங்களை ஏற்படுத்திவருகின்றது. ஈரானின் புதிய உச்ச தலைவரையும் கொல்வதற்கு இஸ்ரேல், அமெரிக்கா தீவிரம் காட்டிவரும் நிலையில், மறுபுறத்தில் ஈரானும் தாக்குதல்களை நடத்திவருகின்றது. இந்நிலையில் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் Drone தாக்குதல்களிலிருந்து பாரசீக வளைகுடா நாடுகளைப் பாதுகாப்பதற்காக, ஆஸ்திரேலியா Australia இராணுவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதற்கமைய பிரதமர் Anthony Albanese, வான்வெளி கண்காணிப்புப் பணிகளுக்காக E-7A வெட்ஜெடைல் விமானத்தையும் 85 இராணுவ […]

செய்தி

பூசகர் வெட்டிக் கொலை: நயினாதீவில் பயங்கரம்!

  • March 9, 2026
  • 0 Comments

யாழ்.நயினாதீவல் Nainatheevu பூசகர் ஒருவர் வெட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்பயங்கரச் சம்பவம் இன்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. தொழில் தொடர்பில் இரு பூசகர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு வாள் வெட்டுவரை சென்றுள்ளது எனக் கூறப்படுகின்றது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகரது வாள் வெட்டிலேயேமற்றைய பூசாரி பலியானார் எனக் கூறப்படுகின்றது. இக்கொலைச் சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ஆஸ்திரேலியா உலகம்

ஈரானிய கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம்!

  • March 9, 2026
  • 0 Comments

ஈரான் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த ஐந்து வீராங்கனைகள், ஆஸ்திரேலியாவில் Australia. தஞ்சம் asylum கோரியுள்ளனர் என தெரியவருகின்றது. 2026 மகளிர்  ஆசியக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுவருகின்றது. ஆஸ்திரேலியா கோல்ட் கோஸ்டில் Gold Coast பிலிப்பைன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற குழு ஆட்டத்தில் ஈரான் அணி தோல்வி அடைந்தது. இதனால் உலகக்கிண்ண தொடரில் இருந்து அவ்வணி வெளியேறியது. ஐந்து வீராங்கணைகள் போட்டியில் தேசிய கீதத்தைப் பாட மறுத்ததால், அவர்கள் தாயகத்தில் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள […]

error: Content is protected !!