செய்தி

பூசகர் வெட்டிக் கொலை: நயினாதீவில் பயங்கரம்!

  • March 9, 2026
  • 0 Comments

யாழ்.நயினாதீவல் Nainatheevu பூசகர் ஒருவர் வெட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்பயங்கரச் சம்பவம் இன்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. தொழில் தொடர்பில் இரு பூசகர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு வாள் வெட்டுவரை சென்றுள்ளது எனக் கூறப்படுகின்றது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகரது வாள் வெட்டிலேயேமற்றைய பூசாரி பலியானார் எனக் கூறப்படுகின்றது. இக்கொலைச் சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ஆஸ்திரேலியா உலகம்

ஈரானிய கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம்!

  • March 9, 2026
  • 0 Comments

ஈரான் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த ஐந்து வீராங்கனைகள், ஆஸ்திரேலியாவில் Australia. தஞ்சம் asylum கோரியுள்ளனர் என தெரியவருகின்றது. 2026 மகளிர்  ஆசியக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுவருகின்றது. ஆஸ்திரேலியா கோல்ட் கோஸ்டில் Gold Coast பிலிப்பைன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற குழு ஆட்டத்தில் ஈரான் அணி தோல்வி அடைந்தது. இதனால் உலகக்கிண்ண தொடரில் இருந்து அவ்வணி வெளியேறியது. ஐந்து வீராங்கணைகள் போட்டியில் தேசிய கீதத்தைப் பாட மறுத்ததால், அவர்கள் தாயகத்தில் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள […]

இலங்கை செய்தி

இஸ்ரேலுக்கு ஆதரவாக இலங்கையில் களமிறங்கிய தேரர்!

  • March 9, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நடைபெறும் போரில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இன்று (09) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பத்தரமுல்லே சீலரதன தேரர் தலைமையிலான Venerable Battaramulla Seelarathana Thero சிறு குழுவொன்றே இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் வந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தி, போரில் மேற்படி நாடுகளுக்குரிய ஆதரவை வெளிப்படுத்தினர். இலங்கையில் நடந்தபோரின்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் வழங்கி ஆதரவை தாங்கள் மறக்கவில்லை என்றபோதிலும், இந்த போரில் இஸ்ரேல் […]

அரசியல் இலங்கை செய்தி

மின்சார சபையின் இறுதி ஊர்வலம் ஆரம்பம்: அபாய சங்கு ஊதுகிறார் சஜித்!

  • March 9, 2026
  • 0 Comments

“தேசிய நிறுவனங்கள் பாதுகாக்கப்படும் எனக்கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இன்று மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa குற்றஞ்சாட்டியுள்ளார். “ இலங்கையின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்பு ஜே.வி.பியின் JVP நிலைப்பாடாக அமைந்திருந்தது. ஆனால் இன்று அதற்கு மாறான செயல்பாடே இடம்பெறுகின்றது.” எனவும் அவர் கூறினார். “மின்சார சபை ஊழியர்களை வீதிகளுக்கு இறக்கி மின்சார சபையில் கைவைக்க விட […]

இலங்கை செய்தி

பெருந்தோட்ட அமைச்சுக்கு புதிய செயலர் நியமனம்!

  • March 9, 2026
  • 0 Comments

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டார். குறித்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குணதாச சமரசிங்க, இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும்போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

இலங்கை செய்தி

ஜனாதிபதியை சந்தித்தார் தம்மாலங்கார தேரர்!

  • March 9, 2026
  • 0 Comments

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், பன்னிபிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாராதிபதி வண, இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி, தேரருடன் சிறு உரையாடலை மேற்கொண்டதுடன், அரசாங்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க ஜனாதிபதிக்கு தேரர் தனது ஆசிர்வாதங்களைத் தெரிவித்தார். கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா […]

உலகம் செய்தி

ஈரானின் புதிய உச்ச தலைவரும் ‘குறிவைப்பு’!

  • March 9, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவர் நியமனத்துக்கு அமெரிக்காவின் ஒப்புதல் அவசியம் என டொனால்ட் ட்ரம்ப் Donald Trump மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு இல்லையேல் பதவிக்கு வருபவர் நீண்ட காலம் அப்பதவியில் நீடிக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார். எனினும், வெளியக தலையீடின்றி ஈரான் Iran தனது புதிய உச்ச தலைவரை நியமித்துள்ளது என்று அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மறைந்த அயதுல்லா அலி காமேனியின் மகனான மொஜ்தபா காமேனியே Mojtaba Khamenei புதிய உச்ச தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். […]

இந்தியா

இராஜதந்திர தீர்வை வலியுறுத்துகிறது இந்தியா!

  • March 9, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை நிறுத்துவதற்கு பேச்சு மற்றும் இராஜதந்திர வழியில் சிறந்த தீர்வை காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் S. Jaishankar இந்த வலியுறுத்தலை விடுத்தார். “ மேற்கு ஆசியாவில் ஏற்பட்டு வரும் நிலைமைகளை பிரதமர் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். சரியான விதத்தில் பதிலளிக்க ஏதுவாக அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த தொடர்ச்சியான […]

இலங்கை செய்தி

மகளை காணாமலேயே மரணமான தந்தை: தமிழர் தாயகத்தில் தொடரும் சோகம்!

  • March 9, 2026
  • 0 Comments

வவுனியாவில் காணாமல் போன தனது மகளைத் தேடிவந்த தந்தை ஒருவர் நேற்று (08) மரணமடைந்துள்ளார். தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி ஜெயவனிதாவின் கணவரான பெரியமடு நெடுங்கேணி பகுதியை சேர்ந்த காசிப்பிள்ளை(66 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மகளான கா.ஜெரோமி 2009 இல் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்ததார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுரத்தில் […]

விளையாட்டு

இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து: கிடைத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

  • March 9, 2026
  • 0 Comments

ICC T- 20 உலகக் கிண்ணத்தை 3ஆவது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள், வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர். இந்திய அணி இதற்கு முன்னர் 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.மேலும் தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் புரிந்தது. போட்டியை நடத்திய […]

error: Content is protected !!