உலகம் செய்தி

அமைதிக்காக ரஷ்யா அனைத்தையும் செய்யும்: புடின் உறுதி!

  • April 28, 2026
  • 0 Comments

நாட்டின் இறையாண்மைக்காக போராடும் ஈரான் மக்களின் தற்துணிவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டியுள்ளார். ஈரான் வெளிவிவகார அமைச்சர் நேற்று தன்னை சந்தித்து பேச்சு நடத்தியபோதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார். அத்துடன், அமைதி முயற்சி வெற்றியளிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரஷ்யா வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் தற்போது கடற்படை முற்றுகை மற்றும் கப்பல் போக்குவரத்து சிக்கல்களால் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. அமைதி பேச்சில் பங்கேற்பதை […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் அணுகுமுறை குறித்து ரஷ்யாவிடம் முறையிட்ட ஈரான்!

  • April 28, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் அதிகப்படியான கோரிக்கைகளே அமைதி பேச்சு தோல்வியடையக் காரணம் என்று ரஷ்ய ஜனாதிபதியிடம், ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி நேற்று சந்தித்து பேச்சு நடத்தியபோதே வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, ஈரானிய துறைமுகங்கள் மீதான தடையை நீக்கினால் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இது பற்றி ரஷ்ய தரப்புக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேற்படி திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி தனது பாதுகாப்பு ஆலோசகர்களுடன் தீவிரமாக […]

விளையாட்டு

IPL வரலாற்றில் மோசமான சாதனை: டெல்லி அணிக்கு பெரும் சோகம்!

  • April 28, 2026
  • 0 Comments

IPL வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மோசமான சாதனையை Delhi Capitals அணி நேற்று பதிவு செய்துள்ளது. IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 39 ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru மற்றும் Delhi Capitals ஆகிய அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற RCB அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி பவர்பிளே ஓவர்களில் முற்றிலும் நிலைகுலைந்தது. பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவுக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம்!

  • April 28, 2026
  • 0 Comments

நெடுநாள் இழுபறிக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கான புதிய அமெரிக்க தூதுவரை ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். குடியரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான David Brat என்பவரே இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், ராஜதந்திர சேவையிலும் தேர்ச்சி பெற்றவர். 2024-ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய தூதுவர் பதவியில் இருந்து கரோலின் கென்னடி விலகிய பிறகு, நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்த இடத்திற்கு தற்போது இவர் நியமிக்கப்பட்டுள்ளார். ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரே இவர் பதவி விலகி […]

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

  • April 27, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும், 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் அத்திணைக்களம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. இந்த இலக்குகளை அடைந்துகொள்வதில் நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, தேசிய e-invoicing முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் […]

உலகம் செய்தி

தோள் கொடுக்கும் ரஷ்யாவுக்கு ஈரான் நன்றி தெரிவிப்பு!

  • April 27, 2026
  • 0 Comments

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை இன்று (27) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ஈரானுக்கு ரஷ்யா வழங்கிவரும் உறுதியான தொடர் ஆதரவிற்கு Abbas Araghchi நன்றி தெரிவித்தார். சர்வதேச அரங்கில் ஈரான் தனித்து விடப்படவில்லை என்பதையும், தங்களுக்கு நம்பகமான நண்பர்கள் இருப்பதையும் ரஷ்யாவுடனான உறவு உலகிற்கு நிரூபிப்பதாகவும் கூறியுள்ளார். அதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ரஷ்ய விஜயம் தொடர்பில் அமெரிக்கா தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக கட்டுப்படுத்த ஈரான் வியூகம்!

  • April 27, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையின் முழுமையான கட்டுப்பாட்டைப் ஈரான் ராணுவம் பொறுப்பேற்கும் வகையில் புதிய சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைய மேற்படி நீரிணை வழியாகச் செல்லும் பகைமை நாடுகளின் கப்பல்களைத் தடுக்கவும் அதன் நிர்வாகத்தை முறைப்படுத்தவும் ஈரான் திட்டமிட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவரான எப்ராஹிம் அசிசி, Ebrahim Azizi ஹார்முஸ் நீரிணை ஏற்கனவே ஈரானியப் படைகளின் கண்காணிப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கடல்வழிப் போக்குவரத்து மூலம் ஈட்டப்படும் லாபங்கள் அனைத்தும் ஈரானிய ரியால் மதிப்பிலேயே பெறப்பட வேண்டும் என […]

உலகம் செய்தி

அமெரிக்க படைகள் தயார் நிலையில்!

  • April 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்கப் படைகள் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் CENTCOM அறிவித்துள்ளது. போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், பிராந்தியத்தின் பாதுகாப்பில் தாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையில் மேற்படி அறிவிப்பு போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இலங்கை செய்தி

நீலகாமம் சம்பவம்: பிரதி அமைச்சர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

  • April 27, 2026
  • 0 Comments

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் பெருந்தோட்ட பகுதிகளில் அடியாட்களை வைத்திருப்பது சட்டவிரோதம் எனவும், நீலகாமத்துக்கு சென்றவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை முன்வைக்குமாறும் பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளரிடம் இதற்குரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கஹவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பிலும், வீடமைப்பு சம்பவம் குறித்தும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இன்று […]

இலங்கை செய்தி

டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால தங்குமிட வசதி!

  • April 27, 2026
  • 0 Comments

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம், பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளையில் இடைக்கால தங்குமிடங்களை அமைக்கும் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல் , அவற்றைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்தல் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தபட்டது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், இடம்பெயர்ந்த சுமார் 1,000 பேரை பாதுகாப்பான மற்றும் […]

error: Content is protected !!