பிள்ளையானின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழான கைது மற்றம் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனு மீதான வாய்மொழி வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.





