பிரித்தானியாவில் போதைப் பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் ஓட்டும் சாரதிகள் – ஒரு சிறப்பு பார்வை
பிரித்தானியாவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் குற்றங்களை விட, போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இதன்படி, வடக்கு வேல்ஸ் முழுவதும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, வடக்கு வேல்ஸ் பொலிஸார், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக 883 பேரையும், போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக மேலும் 1,317 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் 2024ம் ஆண்டை […]












