இலங்கை செய்தி

சைபர் தாக்குதலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் – ஹர்ஷ குற்றச்சாட்டு

  • April 25, 2026
  • 0 Comments

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி நுணுக்கமான இணையவழி தாக்குதல் அல்ல என்றும், அதிகாரிகளின் அடிப்படை அலட்சியத்தினால் ஏற்பட்ட விளைவு என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார். பாரியளவிலான நிதிப் பரிமாற்றங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய முறையான நிதித் தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மில்லியன் கணக்கான ரூபாய்களைப் பரிமாற்றம் செய்வதற்கு முன்னதாக, அந்த வங்கிக் கணக்கை உறுதிப்படுத்துவதற்காக ஒரு சிறிய தொகையை அனுப்பிச் சரிபார்க்கும் வழக்கமான நடைமுறை […]

இலங்கை செய்தி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தைக் கடந்தது

  • April 25, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8,40,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 8,40,411 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகளாவர். இதன்படி, வருகை தந்த இந்திய பிரஜைகளின் எண்ணிக்கை 1,76,465 ஆகும். பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான […]

இலங்கை செய்தி

அடுத்த மாதம் முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகள்

  • April 25, 2026
  • 0 Comments

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகளை பயன்பாட்டிற்கு விடுவிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி சங்கம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் இலகுவான, காகிதமற்ற மற்றும் வினைத்திறனான அனுபவத்தை உறுதி செய்யும் நோக்கில், வாகன காப்புறுதி […]

உலகம் செய்தி

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் இரவு விருந்தில் ட்ரம்ப் பங்கேற்பு – ஊடக சுதந்திரம் குறித்து மீண்டும் விவாதம்

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), வெள்ளை மாளிகையில் நடைபெறும் பாரம்பரிய பத்திரிகையாளர் இரவு விருந்தில் கலந்துகொள்ள உள்ளார். 1921 முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்வு, பத்திரிகையாளர்களும் ஜனாதிபதியும் ஒன்றாக கலந்துகொள்ளும் ஒரு பாரம்பரிய விருந்தாகும். ஆனால், இது பல ஆண்டுகளாக ஊடக சுதந்திரம் மற்றும் அரசியல் உறவுகள் குறித்து சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. டிரம்ப் தனது அரசியல் வாழ்க்கையில் பெரும்பாலும் ஊடகங்களை விமர்சித்து வந்தவர். இதற்கு முன்பு இந்த இரவு விருந்தில் அவர் […]

இலங்கை செய்தி

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற உணவகம் – 10 இலட்சம் ரூபா அபராதம்

  • April 25, 2026
  • 0 Comments

குடிநீர் போத்தலை அதன் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, ஹப்புத்தளையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி இந்த அபராதம் விதிக்கப்பட்டது. ஹப்புத்தளை, வெலிமடை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான உணவகம் ஒன்றிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, அங்கீகரிக்கப்பட்ட […]

இலங்கை செய்தி

நேற்று தடம் புரண்ட ‘சாகரிகா’ ரயில் தற்போது மீண்டும் தடம் புரண்டது

  • April 25, 2026
  • 0 Comments

‘சாகரிகா’ ரயில் நேற்று (24) தடம் புரண்டிருந்த நிலையில் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது. இன்று மாலை 06.20 அளவில் இந்தத் தடம் புரள்வு ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக கடற்கரை மார்க்கமான ரயில் பாதையின் ஒரு வழித்தடம் மீண்டும் தடைப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தைக்கு இடையில் தற்போது ஒரு வழித்தடத்தில் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை தடம் புரண்டிருந்த […]

இலங்கை செய்தி

கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும் மின்சார சபைக்கு ரூ. 38.7 பில்லியன் நட்டம்

  • April 25, 2026
  • 0 Comments

மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் மின்சார சபையின் மொத்த நட்டம் 38.7 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் பலமுறை மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கட்டணங்கள் மேலும் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டன. இக்கட்டணக் […]

இலங்கை செய்தி

புறக்கோட்டையில் 20 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

  • April 25, 2026
  • 0 Comments

புறக்கோட்டையின் நான்கு வெவ்வேறு இடங்களில் சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 04 இலட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு இலட்சத்து நான்காயிரம் போதை மாத்திரைகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த […]

ஐரோப்பா செய்தி

அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இளைஞர் – பெண் படுகொலை குற்றச்சாட்டில் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்

  • April 25, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் நகரில் 27 வயது பெண் ஒருவரைக் கொலை செய்ததாக 18 வயதான என்சோ பெட்டாமியோ (Enzo Bettamio) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் துபாய் (Dubai) நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இங்கிலாந்து (United Kingdom) கொண்டு வரப்பட்டு, கமோனன் தியாம்பனிட் (Kamonon Thiambanith) என்பவரைக் கொலை செய்ததாக முறைப்படி குற்றம் சாட்டப்பட்டார். அந்தப் பெண் “ஏஞ்சலா” (Angela) என்றும் அழைக்கப்பட்டார். சனிக்கிழமை அவர் வெஸ்ட்மின்ஸ்டர் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனம் உருவாக வாய்ப்பு

  • April 25, 2026
  • 0 Comments

ஜெர்மன் (Germany) நாட்டைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனமான E.ON, பிரித்தானியாவில் செயல்படும் தனது போட்டியாளர் ஓவோ எனர்ஜி (Ovo Energy) உடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்தால், பிரித்தானியாவில் 9.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட பெரிய எரிசக்தி நிறுவனமொன்று உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் E.ON நிறுவனத்துக்கு சுமார் 5.7 மில்லியன் வாடிக்கையாளர்களும், ஓவோ எனர்ஜிக்கு சுமார் 4 மில்லியன் வாடிக்கையாளர்களும் உள்ளனர். ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் […]