ஐரோப்பா செய்தி

அன்சாக் தினம் அனுஷ்டிப்பு – உலகம் முழுவதும் வீரர்களுக்கு அஞ்சலி, லண்டனில் இளவரசி கேட் மலர்வளையம்

  • April 25, 2026
  • 0 Comments

போர்களில் உயிரிழந்த அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து வீரர்களை நினைவுகூரும் அன்சாக் தின (ANZAC Day) நிகழ்வுகள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டன. இதற்கமைய இங்கிலாந்தில், வேல்ஸ் இளவரசி கேட் (Kate ) லண்டனில் உள்ள செனோடாஃப் (Cenotaph) நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், வெஸ்ட்மின்ஸ்டர் அபே (Westminster Abbey) தேவாலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் மற்றும் நன்றி செலுத்தும் நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார். இதற்கு முன் நடைபெற்ற அதிகாலை நிகழ்வில் இளவரசி ஆன் (Princess Anne) […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் சிறுவர்கள் உயிரிழந்த சோகம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

  • April 25, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் வோல்வர்ஹாம்டன் (Wolverhampton) நகரில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேசன் தெரு (Mason Street) பகுதியில் நேற்றிரவு இரவு உள்ள ஒரு வீட்டில் தீ ஏற்பட்டதாக அவசர சேவைகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸார் (West Midlands Police), தீயணைப்பு சேவை மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் […]

உலகம் செய்தி

லெபனானின் ஸ்திரத்தன்மை பிராந்தியத்திற்கு அவசியம் – ஜனாதிபதி அவுன் எச்சரிக்கை

  • April 24, 2026
  • 0 Comments

சைப்ரஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் உரையாற்றிய லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், தனது நாட்டின் ஸ்திரத்தன்மை பரந்த பிராந்தியத்திற்கும் முக்கியமானது என வலியுறுத்தினார். “லெபனானின் ஸ்திரத்தன்மை, முழு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கே அடிப்படையாகும். எந்தவொரு ஸ்திரத்தன்மையின்மையும் அதன் எல்லைகளுக்குள் மட்டுமே தங்காது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். மேலும், முதலீடு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பின் மூலம் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நெருக்கடி நிலைமையிலிருந்து […]

உலகம் செய்தி

இஸ்ரேல், லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் ?

  • April 24, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,  தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல் தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளிப் பதிவில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஆனால், இந்த முயற்சிகளை ஹிஸ்புல்லா சீர்குலைக்க முயற்சிப்பது தெளிவாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இந்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) மற்றும் ஹிஸ்புல்லா இரண்டும், போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு விவகாரம்: ரஷ்யா–பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை

  • April 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்‌ ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் முன்பாகவே இந்த உரையாடல் நடைபெற்றது. ஈரான்–அமெரிக்கா இடையிலான நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் இஸ்லாமாபாத் மேற்கொண்டு வரும் மத்தியஸ்தப் பங்கினை லாவ்ரோ பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த முயற்சிகளுக்கு மாஸ்கோ முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவு […]

உலகம் செய்தி

அமெரிக்கா கப்பலை இடைமறித்தது சர்வதேச சட்ட மீறல் – ஈரான் குற்றச்சாட்டு

  • April 24, 2026
  • 0 Comments

‘தௌஸ்கா’ என்ற வர்த்தகக் கப்பலை அமெரிக்கா இடைமறித்தது சர்வதேச சட்ட மீறல் என்று ஐ.நா-வில் உள்ள ஈரானின் தூதரகம், குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்டதாக கூறப்படும் கடற்படை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த கப்பலின் பெயர் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கைக்கு பதிலளிக்காததால் அந்த கப்பல் இடைமறிக்கப்பட்டது என்று கூறியிருந்தார். ஆனால், ஈரானின் ஐ.நா தூதரகம் […]

உலகம் செய்தி

ஈரான் வெளியுறவு அமைச்சரின் பிராந்திய சுற்றுப்பயணம் – இஸ்லாமாபாத் விஜயம் உறுதி

  • April 24, 2026
  • 0 Comments

ஈரான் அரசு,  வெளியுறவு அமைச்சர் இன்று இரவு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்துள்ளது. அவர் சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவின்படி, இந்தப் பயணம் ஒரு பிராந்திய சுற்றுப்பயணத்தின் பகுதியாகும். அதில் அவர் ஓமான் நாட்டின் மஸ்கட் நகருக்கும், ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கும் செல்கிறார். இந்தப் பயணங்களில் இருதரப்பு உறவுகள், பிராந்திய நிலவரங்கள் மற்றும் ஈரானைச் சுற்றியுள்ள தற்போதைய மோதல் நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனினும், பாகிஸ்தானில் அமெரிக்கா […]

இந்தியா உலகம்

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

  • April 24, 2026
  • 0 Comments

இந்தியா – அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “ஏப்ரல் 20 முதல் 23 வரை, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை உயரதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு இந்திய தரப்பில் தர்பன் ஜெயின் தலைமை தாங்கினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, சந்தை […]

உலகம் செய்தி

ஈரான்–அமெரிக்கா பேச்சுவார்த்தை: முற்றுகையை நீக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தல்

  • April 24, 2026
  • 0 Comments

ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரானிய தூதர், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டுமானால், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில்‌ கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில், அந்த முற்றுகை போர் நிறுத்த ஒப்பந்தத்தின் குறிப்பிடத்தக்க மீறல் என்று கூறினார். மேலும், மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும்போது ஈரானின் உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்காவிடமிருந்து ஒரு யதார்த்தமான அணுகுமுறை […]

இலங்கை செய்தி

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்

  • April 24, 2026
  • 0 Comments

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள் (Dansal) தொடர்பான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அன்னதானங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள தரப்பினர், அது குறித்து அந்தந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு அறியப்படுத்தி, பதிவுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரலெஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார். இதன்போது, அன்னதானம் நடத்தப்படும் இடம் மற்றும் அது எவ்வகையான  என்பது குறித்த விபரங்களை உரிய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். […]