இலங்கை செய்தி

மஹிந்த நாளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

  • May 11, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமேஜ் தெரிவித்துள்ளார். இதன்படி, நாளை காலை 9.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவர் கூறியுள்ளார். இருப்பினும், சில சட்ட ரீதியான விடயங்கள் குறித்து கலந்துரையாட வேண்டியுள்ளதால், இன்று மாலை சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் இது தொடர்பில் ஆலோசிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, மறைந்த கபில சந்திரசேன […]

இலங்கை

ஏர்பஸ் கொள்வனவு ஊழல் : மஹிந்தவுக்கு அழைப்பாணை!

  • May 9, 2026
  • 0 Comments

2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆறு ஏர்பஸ் ஏ-330 விமானங்களையும் எட்டு ஏ-350 விமானங்களையும் வாங்கியபோது, ​​அப்போதைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்கவும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.  தற்போது கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்க்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு […]

இலங்கை செய்தி

ஆட்சியை கைப்பற்றுவதற்கான பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது -மஹிந்த

  • April 20, 2026
  • 0 Comments

ஆட்சியை கைப்பற்றுவதற்கான பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். இம்முறை மே தினம் பௌத்தர்களின் புனித […]