ஐரோப்பா செய்தி

லண்டனுக்கு கூடுதல் பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தல்!

  • May 1, 2026
  • 0 Comments

கோல்டர்ஸ் கிரீனில் நடந்த கத்தி குத்து தாக்குதலை தொடர்ந்து  லண்டனுக்குக் கூடுதலாக 300 அதிகாரிகளை நியமிக்குமாறு பெருநகர காவல்துறை ஆணையர் சர் மார்க் ரௌலி (Sir Mark Rowley) கோரிக்கை விடுத்துள்ளார். யூத சமூகங்களை மையமாகக் கொண்ட ஒரு பிரத்தியேகமான காவல்நிலையத்தை நிறுவவும் அவர் முன்மொழிந்துள்ளார். மேலும் துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள் போன்ற கூடுதல் சிறப்பு வளங்களை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்புடைய செய்தி பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு கடுமையாக […]

ஐரோப்பா

லண்டனில் நீரில் மூழ்கி தாயும், சேயும் உயிரிழப்பு!

  • April 26, 2026
  • 0 Comments

லண்டனின்  எல்தோர்ன் (Elthorne) பூங்காவில் அமைந்துள்ள நீர்நிலையில் சிக்கித் தவித்த தாயும், மகனும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பெருநகர காவல்துறையினர்  நீரில் மூழ்கியிருந்த இருவரையும் மீட்டு சிகிச்சையளித்தபோதிலும், அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் ஆரம்பகட்ட தகவல்களின்படி, அவர்களின் மரணங்கள் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படவில்லை. துப்பறியும் கண்காணிப்பாளர் பீட் தாக்கரே, குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, முதலுதவி அளித்தவர்கள் மற்றும் பொதுமக்களின் முயற்சிகளையும் […]

ஐரோப்பா செய்தி

அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இளைஞர் – பெண் படுகொலை குற்றச்சாட்டில் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்

  • April 25, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் நகரில் 27 வயது பெண் ஒருவரைக் கொலை செய்ததாக 18 வயதான என்சோ பெட்டாமியோ (Enzo Bettamio) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் துபாய் (Dubai) நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இங்கிலாந்து (United Kingdom) கொண்டு வரப்பட்டு, கமோனன் தியாம்பனிட் (Kamonon Thiambanith) என்பவரைக் கொலை செய்ததாக முறைப்படி குற்றம் சாட்டப்பட்டார். அந்தப் பெண் “ஏஞ்சலா” (Angela) என்றும் அழைக்கப்பட்டார். சனிக்கிழமை அவர் வெஸ்ட்மின்ஸ்டர் […]

ஐரோப்பா செய்தி

அன்சாக் தினம் அனுஷ்டிப்பு – உலகம் முழுவதும் வீரர்களுக்கு அஞ்சலி, லண்டனில் இளவரசி கேட் மலர்வளையம்

  • April 25, 2026
  • 0 Comments

போர்களில் உயிரிழந்த அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து வீரர்களை நினைவுகூரும் அன்சாக் தின (ANZAC Day) நிகழ்வுகள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டன. இதற்கமைய இங்கிலாந்தில், வேல்ஸ் இளவரசி கேட் (Kate ) லண்டனில் உள்ள செனோடாஃப் (Cenotaph) நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், வெஸ்ட்மின்ஸ்டர் அபே (Westminster Abbey) தேவாலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் மற்றும் நன்றி செலுத்தும் நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார். இதற்கு முன் நடைபெற்ற அதிகாலை நிகழ்வில் இளவரசி ஆன் (Princess Anne) […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

எப்ஸ்டீன் தொடர்பான முறைப்பாட்டை புறக்கணித்த இங்கிலாந்து காவல்துறை – வழுக்கும் கண்டனம்!

  • April 24, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) லண்டனில் உள்ள கென்சிங்டன் (Kensington) மற்றும் செல்சியாவில் (Chelsea)  குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அங்கு நான்கு பெண்களை தங்கவைத்திருந்ததாக பிபிசி நடத்திய விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் சாட்சியம் வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்ததாகவும்,   பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் எப்ஸ்டீனைச் சந்திப்பதற்காக யூரோஸ்டார் ரயில் மூலம் அடிக்கடி பாரிஸுக்கு […]

அரசியல் இலங்கை

என்.பி.பி. அரசை கைவிட்டனரா புலம்பெயர் தமிழர்கள்?

  • November 26, 2025
  • 0 Comments

புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாததாலேயே ஆளுங்கட்சியான ஜே.வி.பியின் செயலாளருக்கு எதிராக லண்டனில் போராட்டம் வெடித்தது என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஜே.வி.பியின் செயலாளருக்கு எதிராக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. தேர்தல் காலத்தில் ஆதரவு வழங்கிய அந்த குழு தற்போது விலகிச் சென்றது ஏன் எனவும் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த […]

உலகம்

05 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக லண்டனுக்கு விமான சேவையை ஆரம்பித்த பாகிஸ்தான்!

  • October 25, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் 05 ஆண்டுகளில் முதல் முறையாக பிரித்தானியாவிற்கு தனது சேவைகளை தொடங்கியுள்ளது. போலி விமானி உரிம ஊழல் தொடர்பாக விமான நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கராச்சியில் ஏற்பட்ட கொடிய விபத்தில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் விமானிகள் போலி உரிமங்களுடன் பறப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இங்கிலாந்திற்கு விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. 2024 ஆம் […]

செய்தி

லண்டன் முழுவதும் அவசர சேவைகளுக்கு பதிலளிக்க ட்ரோன்களை அனுப்பும் காவல்துறை!

  • October 23, 2025
  • 0 Comments

பிரித்தானியா – லண்டன் முழுவதும் அவசர தொலைபேசிகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் சம்பவ இடத்திற்கு ட்ரோன்களை அனுப்பும் முன்னோடி திட்டம் இன்று பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. குறித்த ட்ரோன்களில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்கள் (cameras) நேரடி காட்சிகளை ஸ்ட்ரீமிங் (streaming) செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொலைதூர கட்டடத்தில் ஏதேனும் ஒரு குற்றச்செயல் இட்பெற்றால் அதனை இனங்காண இலகுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி விரைவான உளவுத்துறையை வழங்குதல், காணாமல் போனவர்களின் விசாரணைகளுக்கு உதவுதல், […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்காக உளவு பார்த்த மூவர் லண்டனில் கைது!

  • October 23, 2025
  • 0 Comments

ரஷ்ய உளவுத்துறை சேவைகளுக்கு உதவிய சந்தேகத்தின்பேரில் மூன்று பேர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறித்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ காவல் துறை தெரிவித்துள்ளது. 48, 45 மற்றும் 44 வயதுடைய ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  பயங்கரவாத எதிர்ப்பு காவல் துறையின் தலைவர் கமாண்டர் டொமினிக் மர்பி (Dominic Murphy) “வெளிநாட்டு உளவுத்துறை சேவைகளால் ‘பிரதிநிதிகள்’ என்று […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரிக்கப்படும் ஊதியம் – அரை மில்லியன் தொழிலாளர்கள் பயன்பெறுவர்!

  • October 22, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் ஒரு மணித்தியாலத்திற்கு வழங்கப்படும் ஊதியம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பானது அரை மில்லியன் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பின்படி ஒருமணி நேரத்திற்கு வழங்கப்படும் ஊதியமானது £13.45 பவுண்ட்ஸ் ஆகவும் லண்டனில் £14.80 பவுண்ட்ஸ்  ஆகவும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய லண்டனில் 95 பென்ஸ் அதிகரிக்கப்படும் அதேவேளை பிற இடங்களில் 85 பென்ஸ் அதிகரிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையின் அடிப்படையில் ஊதிய உயர்வை கணக்கிடும் அறக்கட்டளை, முழுநேரமாக வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஆண்டிற்கு […]