ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் : ஈரான் சார்பாக இயங்கும் குழு தொடர்பில் எச்சரிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

ஹரகாத் அஷாப் அல்-யாமின் அல்-இஸ்லாமியா (HAYI) அமைப்பை ஈரானிய பதிலி குழுவாகவும், குறிப்பாக கட்டாயிப் ஹிஸ்புல்லாவின் முகவராகவும் அமெரிக்க நீதித்துறை அடையாளம் கண்டுள்ளது. இந்தக் குழு லண்டனில் நடந்த சம்பவங்கள் உட்பட, ஐரோப்பா முழுவதும் யூத மக்கள், வணிகங்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைத்து 20 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய இராணுவ மோதல் தொடங்கிய சிறிது காலத்திலேயே HAYI உருவான நிலையில், பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஐரோப்பா மற்றும் கனடாவில் உள்ள பல […]

ஐரோப்பா

பணிநிறுத்த நடவடிக்கை : லண்டன் ரயில் ஓட்டுநர்களின் புதிய தீர்மானம்!

  • May 18, 2026
  • 0 Comments

லண்டன் சுரங்கபாதை ரயில் ஓட்டுநர்கள் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த நடவடிக்கையானது வரும் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய பணி அட்டவணைகள், சோர்வு மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பான கவலைகளை மேலும் ஆராய்வதற்கு ஏதுவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வரும் ஜூன் மாதம்  2 மற்றும் 4 […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் கட்டளையை மீறிச்சென்ற கார் விபத்து – 09 பேர் காயம்

  • May 17, 2026
  • 0 Comments

லண்டன் நகரின் கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச்சென்ற காரொன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தை நிறுத்த பொலிஸார் முயன்றபோது, அந்த கார் நிற்காமல் தப்பிச் சென்றதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த கார் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு கார்களிலும் இருந்தவர்கள் மற்றும் ஒரு மோட்டார் ஸ்கூட்டர் ஓட்டுநர் உட்பட மொத்தம் 10 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஒன்பது பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக […]

ஐரோப்பா

லண்டனில் துப்பாக்கிச்சூடு – உயிருக்கு போராடும் இளைஞர்!

  • May 3, 2026
  • 0 Comments

லண்டனின் பிரிக்ஸ்டனில் நேற்று இடம்பெற்ற   துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்  மேலும் மூவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்ட்ஹார்பர் (Coldharbour) லேனில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்தில் முதலுதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணியில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

ஐரோப்பா

லண்டனில் உச்சபட்ச வெப்பநிலை பதிவு!

  • May 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில், குறிப்பாக லண்டன் மற்றும் ஈஸ்ட் ஆங்லியாவில் ( East Anglia) வெப்பநிலை 27°C வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாளாகவும், ஹவாயில் உள்ள ஹோனோலுலுவை (Honolulu) விட அதிக வெப்பம் கொண்டதாக அமையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கிலிருந்து வரும் ஈரப்பதமான காற்று, கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளுக்கு சூரிய ஒளியைக் கொண்டு வருவதால் இந்த வெப்பமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வாளர் சைமன் பார்ட்ரிட்ஜ் ( […]

ஐரோப்பா செய்தி

லண்டனுக்கு கூடுதல் பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தல்!

  • May 1, 2026
  • 0 Comments

கோல்டர்ஸ் கிரீனில் நடந்த கத்தி குத்து தாக்குதலை தொடர்ந்து  லண்டனுக்குக் கூடுதலாக 300 அதிகாரிகளை நியமிக்குமாறு பெருநகர காவல்துறை ஆணையர் சர் மார்க் ரௌலி (Sir Mark Rowley) கோரிக்கை விடுத்துள்ளார். யூத சமூகங்களை மையமாகக் கொண்ட ஒரு பிரத்தியேகமான காவல்நிலையத்தை நிறுவவும் அவர் முன்மொழிந்துள்ளார். மேலும் துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள் போன்ற கூடுதல் சிறப்பு வளங்களை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்புடைய செய்தி பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு கடுமையாக […]

ஐரோப்பா

லண்டனில் நீரில் மூழ்கி தாயும், சேயும் உயிரிழப்பு!

  • April 26, 2026
  • 0 Comments

லண்டனின்  எல்தோர்ன் (Elthorne) பூங்காவில் அமைந்துள்ள நீர்நிலையில் சிக்கித் தவித்த தாயும், மகனும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பெருநகர காவல்துறையினர்  நீரில் மூழ்கியிருந்த இருவரையும் மீட்டு சிகிச்சையளித்தபோதிலும், அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் ஆரம்பகட்ட தகவல்களின்படி, அவர்களின் மரணங்கள் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படவில்லை. துப்பறியும் கண்காணிப்பாளர் பீட் தாக்கரே, குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, முதலுதவி அளித்தவர்கள் மற்றும் பொதுமக்களின் முயற்சிகளையும் […]

ஐரோப்பா செய்தி

அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இளைஞர் – பெண் படுகொலை குற்றச்சாட்டில் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்

  • April 25, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் நகரில் 27 வயது பெண் ஒருவரைக் கொலை செய்ததாக 18 வயதான என்சோ பெட்டாமியோ (Enzo Bettamio) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் துபாய் (Dubai) நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இங்கிலாந்து (United Kingdom) கொண்டு வரப்பட்டு, கமோனன் தியாம்பனிட் (Kamonon Thiambanith) என்பவரைக் கொலை செய்ததாக முறைப்படி குற்றம் சாட்டப்பட்டார். அந்தப் பெண் “ஏஞ்சலா” (Angela) என்றும் அழைக்கப்பட்டார். சனிக்கிழமை அவர் வெஸ்ட்மின்ஸ்டர் […]

ஐரோப்பா செய்தி

அன்சாக் தினம் அனுஷ்டிப்பு – உலகம் முழுவதும் வீரர்களுக்கு அஞ்சலி, லண்டனில் இளவரசி கேட் மலர்வளையம்

  • April 25, 2026
  • 0 Comments

போர்களில் உயிரிழந்த அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து வீரர்களை நினைவுகூரும் அன்சாக் தின (ANZAC Day) நிகழ்வுகள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டன. இதற்கமைய இங்கிலாந்தில், வேல்ஸ் இளவரசி கேட் (Kate ) லண்டனில் உள்ள செனோடாஃப் (Cenotaph) நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், வெஸ்ட்மின்ஸ்டர் அபே (Westminster Abbey) தேவாலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் மற்றும் நன்றி செலுத்தும் நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார். இதற்கு முன் நடைபெற்ற அதிகாலை நிகழ்வில் இளவரசி ஆன் (Princess Anne) […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

எப்ஸ்டீன் தொடர்பான முறைப்பாட்டை புறக்கணித்த இங்கிலாந்து காவல்துறை – வழுக்கும் கண்டனம்!

  • April 24, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) லண்டனில் உள்ள கென்சிங்டன் (Kensington) மற்றும் செல்சியாவில் (Chelsea)  குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அங்கு நான்கு பெண்களை தங்கவைத்திருந்ததாக பிபிசி நடத்திய விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் சாட்சியம் வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்ததாகவும்,   பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் எப்ஸ்டீனைச் சந்திப்பதற்காக யூரோஸ்டார் ரயில் மூலம் அடிக்கடி பாரிஸுக்கு […]