செய்தி விளையாட்டு

2026 FIFA World cup: ஈரான் வீரர்களுக்கு கிடைத்தது விசா!

  • June 3, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக, ஈரானிய தேசிய அணி வீரர்களுக்கும் , ஊழியர்களுக்கும் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மெக்சிகோ விசா வழங்கியுள்ளதை, துருக்கிக்கான ஈரான் தூதுவர் Mohammad-Hassan Habibollahzadeh உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவுடனான போர் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, ஈரான் தனது பயிற்சி முகாமினை அரிசோனாவிலிருந்து மெக்சிகோ எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்கு மாற்றியுள்ளது. இந்த இடமாற்றத்திற்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA ஒப்புதல் அளித்துள்ளது. ஈரான் தனது குழுநிலை ஆட்டங்களை அமெரிக்காவில் விளையாட […]

உலகம் செய்தி

நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஈரான் தூதரக அதிகாரிகளுக்கு குவைத் உத்தரவு!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரான் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு குவைத் வெளிவிவகார அமைச்சு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஈரானின் மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த அதிகாரிகள் ‘ஏற்றுக்கொள்ளத்தகாத நபர்களாக’ அறிவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று குவைத் அரசு மிகக் கடுமையான காலக்கெடுவை விதித்துள்ளது. குவைத் சர்வதேச விமானநிலையம்மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விவகாரம் […]

உலகம் செய்தி

ஈரான் தாக்குதலில் குவைத்தில் இந்தியர் பலி: 60 இற்கு மேற்பட்டோர் காயம்!

  • June 3, 2026
  • 0 Comments

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேற்படி தாக்குதலை “ஈரானின் குற்றவியல் ஆக்கிரமிப்பு” என குவைத் பாதுகாப்பு அமைச்சு கண்டித்துள்ளது. ஈரானிய எண்ணெய் கப்பல் மற்றும் கெஷ்ம் தீவுமீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே மேற்படி தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. மேலும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் தாம் இலக்கு வைத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த புதிய பதற்றநிலையானது அமெரிக்கா […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

மாநிலங்களவை இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கியது தவெக!

  • June 3, 2026
  • 0 Comments

தமிழகத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தெரிவித்தார். இந்தியா முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 6 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலையில் முடிவடைகிறது. இதனால், அந்த இடங்களுக்கு ஜூன் 18ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், 3 இடங்களுக்கு அதே […]

இலங்கை செய்தி

யாழ். முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் விபத்தில் பலி!

  • June 3, 2026
  • 0 Comments

வவுனியா, கனகராயன்குளம் – பெரியகுளம் பகுதியில் ஏ – 9 பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வவுனியா – யாழ்ப்பாணம் ஏ – 9 பிரதான வீதியில், கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு இரு இளைஞர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, அவ்வழியாக […]

உலகம் செய்தி

அமெரிக்க அரசியல் தலைவர்களை கொலை செய்ய சதியா? ஈரான் மறுப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

அமெரிக்க அரசியல் தலைவர்களைக் கொலை செய்ய ஈரான் சதி செய்வதாக அந்நாட்டு வெளிவிவகாரச் செயலாளர் Marco Rubio முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இப்படியான குற்றச்சாட்டுகள் திசைதிருப்பும் நடவடிக்கைகள் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் Esmail Bagheiri தெரிவித்துள்ளார். அத்துடன், ஈரானியர்களுக்கு எதிராக அமெரிக்கா இழைத்த போர்க்குற்றங்களை மறைக்கவே இத்தகைய பொய்கள் பரப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதநேயமற்ற செயல்களை மூடிமறைக்க அமெரிக்கா தற்போது […]

இலங்கை செய்தி

கோட்டாபயவுக்கு பயணத் தடை விதிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையிலேயே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபர்களுக்கு எதிராக பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். குறித்த மனுவைப் பரிசீலித்த நீதிவான் பசன் அமரசேன, பயணத் தடைகளை […]

அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சி கவிழுமா? எதிரணியின் நோக்கம் என்ன?

  • June 3, 2026
  • 0 Comments

தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பொருளாதார நெருக்கடி, ஆட்சி கவிழப்பு என்பன பற்றி எதிரணிகள் பிரச்சாரம் செய்துவருகின்றன. ஆனால் அரசாங்கம் ஸ்தீரமான நிலையில் உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது நடந்ததுபோல அரசாங்கம் கவிழும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் கூறிவருவது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ […]

செய்தி விளையாட்டு

FIFA உலகக் கிண்ண கால்பந்து திருவிழா 11 ஆம் திகதி ஆரம்பம்: 48 அணிகள் களத்தில்!

  • June 3, 2026
  • 0 Comments

4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்து திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமாகவுள்ளது. ஜுலை 19 ஆம் திகதிவரை போட்டிகள் நடைபெறவுள்ளன. வழமைக்கு மாறாக இம்முறை 32 அணிகளுக்குப் பதிலாக மொத்தம் 48 அணிகள் களமிறங்குகின்றன. உலகக் கிண்ண கால்பந்து தொடரை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 3 நாடுகளில் மொத்தம் 16 மைதானங்களில் போட்டி நடைபெறும். போட்டிகள் இலங்கை நேரப்படி நள்ளிரவு […]

உலகம் செய்தி

6 நாடுகளுடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அவசர பேச்சு!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi , துருக்கி, கத்தார், எகிப்து, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு நாடுகளின் அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாக அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த இந்த அவசர ஆலோசனை இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தானுடனான உரையாடலில் அந்த நாட்டின் ராணுவத் தளபதியும் […]