இலங்கை செய்தி

யாழ். முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் விபத்தில் பலி!

  • June 3, 2026
  • 0 Comments

வவுனியா, கனகராயன்குளம் – பெரியகுளம் பகுதியில் ஏ – 9 பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வவுனியா – யாழ்ப்பாணம் ஏ – 9 பிரதான வீதியில், கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு இரு இளைஞர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, அவ்வழியாக […]

உலகம் செய்தி

அமெரிக்க அரசியல் தலைவர்களை கொலை செய்ய சதியா? ஈரான் மறுப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

அமெரிக்க அரசியல் தலைவர்களைக் கொலை செய்ய ஈரான் சதி செய்வதாக அந்நாட்டு வெளிவிவகாரச் செயலாளர் Marco Rubio முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இப்படியான குற்றச்சாட்டுகள் திசைதிருப்பும் நடவடிக்கைகள் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் Esmail Bagheiri தெரிவித்துள்ளார். அத்துடன், ஈரானியர்களுக்கு எதிராக அமெரிக்கா இழைத்த போர்க்குற்றங்களை மறைக்கவே இத்தகைய பொய்கள் பரப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதநேயமற்ற செயல்களை மூடிமறைக்க அமெரிக்கா தற்போது […]

இலங்கை செய்தி

கோட்டாபயவுக்கு பயணத் தடை விதிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையிலேயே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபர்களுக்கு எதிராக பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். குறித்த மனுவைப் பரிசீலித்த நீதிவான் பசன் அமரசேன, பயணத் தடைகளை […]

அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சி கவிழுமா? எதிரணியின் நோக்கம் என்ன?

  • June 3, 2026
  • 0 Comments

தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பொருளாதார நெருக்கடி, ஆட்சி கவிழப்பு என்பன பற்றி எதிரணிகள் பிரச்சாரம் செய்துவருகின்றன. ஆனால் அரசாங்கம் ஸ்தீரமான நிலையில் உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது நடந்ததுபோல அரசாங்கம் கவிழும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் கூறிவருவது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ […]

செய்தி விளையாட்டு

FIFA உலகக் கிண்ண கால்பந்து திருவிழா 11 ஆம் திகதி ஆரம்பம்: 48 அணிகள் களத்தில்!

  • June 3, 2026
  • 0 Comments

4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்து திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமாகவுள்ளது. ஜுலை 19 ஆம் திகதிவரை போட்டிகள் நடைபெறவுள்ளன. வழமைக்கு மாறாக இம்முறை 32 அணிகளுக்குப் பதிலாக மொத்தம் 48 அணிகள் களமிறங்குகின்றன. உலகக் கிண்ண கால்பந்து தொடரை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 3 நாடுகளில் மொத்தம் 16 மைதானங்களில் போட்டி நடைபெறும். போட்டிகள் இலங்கை நேரப்படி நள்ளிரவு […]

உலகம் செய்தி

6 நாடுகளுடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அவசர பேச்சு!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi , துருக்கி, கத்தார், எகிப்து, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு நாடுகளின் அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாக அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த இந்த அவசர ஆலோசனை இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தானுடனான உரையாடலில் அந்த நாட்டின் ராணுவத் தளபதியும் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மத்திய கிழக்கு நாடுகளுக்கு உளவு தகவல் வழங்கும் ஆஸி. போர் விமானம்!

  • June 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய விமானப்படையின் E7 Wedgetail போர் விமானம், மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கி வருவதாக அந்நாட்டுத் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த நவீன கண்காணிப்பு விமானம், வான்வழி அச்சுறுத்தல்கள் குறித்த எச்சரிக்கைகளை சவுதி அரேபியா, ஜோர்டான், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. சேகரிக்கப்படும் இந்தத் தகவல்கள் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமான செயல்பாட்டு மையத்திற்கும் நேரடியாக அனுப்பப்படுகின்றன. இருப்பினும், இந்த […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியலுக்கு வருகிறாரா முன்னாள் ராணுவ சவேந்திர சில்வா?

  • June 3, 2026
  • 0 Comments

முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து, வடமத்திய மாகாணசபை முதல்வர் வேட்பாளராக களமிறங்கவுள்ளார் என வெளியாகும் தகவலை ஐமச SJP நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிராகரித்துள்ளார். சவேந்திர சில்வா வடமத்திய மாகாணசபையின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார் எனவும், அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சனுக்கு நெருக்கமானவர் எனவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சனிடம், சிங்கள ஊடகமொன்று […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் குறித்து ஆஸ்திரேலியா மீளாய்வு!

  • June 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமான ஆக்கஸ் (Aukus) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை மறுஆய்வு செய்ய ஒரு புதிய சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் அமைச்சர் பீட்டர் காரெட் தலைமையிலான இக்குழு, இந்த பிரம்மாண்டமான செலவு மற்றும் நாட்டின் இறையாண்மை மீதான அதன் தாக்கம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்கவுள்ளது. இந்த ஆய்வில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட ஐந்து முக்கிய உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, அணுக்கழிவு மேலாண்மை, பிராந்திய அமைதி […]

ஐரோப்பா செய்தி

ஈரானில் உளவு வழக்கில் சிக்கிய பிரிட்டிஷ் தம்பதியின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரிட்டிஷ் தம்பதியினரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனின் East Sussex பகுதியைச் சேர்ந்த Craig Foreman – 53 மற்றும் அவரது மனைவி Lindsay Foreman – 53 ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிள் மூலம் உலகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, கடந்த 2025 ஜனவரியில் ஈரானில் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் மீது சுமத்தப்பட்ட உளவு குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த பெப்ரவரி மாதம் […]