உலகம் செய்தி

அணு ஆயுதம் குறித்து 2ஆம் சுற்றிலேயே பேச்சு!

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று (16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைகள் இரண்டு முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டு, முதல் கட்டத்தில் ஹார்முஸ் நீரிணை விவகாரம் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் அணுசக்தி விவகாரங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பான இறுதிக் […]

இலங்கை செய்தி

கைது பயத்தில் கோட்டா: நீதிமன்றத்துக்கு ஓட்டம்!

  • June 16, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தான் கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்ககோரி , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாகவே இந்த மனுவை கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ளார். பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, […]

உலகம் ஐரோப்பா

பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் ஹமாஸ் அமைப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் Palestine Action அமைப்புக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ” இது சியோனிச (இஸ்ரேலிய) குழுக்களின் அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஓர் அரசியல் உள்நோக்கம் கொண்ட முடிவாகும்” என ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் அரங்கேற்றப்படும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஒடுக்குவதும், அச்சுறுத்துவதுமே இந்த முடிவின் நோக்கமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலே password வழங்கினால் உளவுத்துறைக்கு ஆபத்தா?

  • June 16, 2026
  • 0 Comments

சுரேஷ் சலேவின் மடிக்கணினி மற்றும் தொலைபேசி என்பவற்றின் கடவுச் சொற்களை (பாஸ்வேட்) தற்போதைய சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசகரவுக்கு வழங்கவேக்கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுபெற்று, சுயாதீன ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே அவரது தகவல்கள் இரகசியமாக பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “சலேயின் மடிக்கணினி, தொலைபேசி என்பவற்றின் கடவுச் […]

உலகம் செய்தி

ஈரான் மத்திய வங்கி ஆளுநர் ரஷ்யா பயணம்!

  • June 16, 2026
  • 0 Comments

மத்திய வங்கி ஆளுநர் தலைமையிலான ஈரான் தூதுக்குழு, இரு நாடுகளுக்கும் இடையிலான நிதி மற்றும் வங்கி உறவுகளை மேம்படுத்த ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதும், இரு நாட்டு மத்திய வங்கிகளுக்கு இடையே புதிய பொருளாதார ஒத்துழைப்பு வழிமுறைகளை உருவாக்குவதும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை ஈரான் எதிர்கொண்டு வரும் சூழலில், அதன் முக்கிய நட்பு நாடான ரஷ்யாவுடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது. அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் குறித்த […]

இலங்கை செய்தி

சீனாவின் ராணுவ ஒத்துழைப்பை பாராட்டுகிறது இலங்கை!

  • June 16, 2026
  • 0 Comments

இலங்கைக்கான சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை நேற்று கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இதன்போது, பாதுகாப்பு பிரதியமைச்சரும் சீன பாதுகாப்பு ஆலோசகரும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இலங்கை ஆயுதப்படைகளின் இராணுவப் பயிற்சி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்பை பாதுகாப்பு […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் தற்காப்பு உரிமைக்கு ஆபத்தா?

  • June 16, 2026
  • 0 Comments

ஈரான் உடனான அமெரிக்காவின் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழு (AIPAC) தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் தற்காப்பு உரிமையையும் அதன் பாதுகாப்புத் திறனையும் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது. ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்கு இந்த இறுதி ஒப்பந்தம் தீர்வுகாண வேண்டும் என்று AIPAC எதிர்பார்க்கின்றது. இந்த பேச்சுவார்த்தை செயல்முறைகளில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் […]

செய்தி விளையாட்டு

பரபரப்பானது ஆடுகளம்: ஈரான் தேசிய கீதத்துக்கு எதிர்ப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது என அறிவிப்புகள் வெளியான சூழலிலேயே இப்போட்டியும் நடைபெற்றது. திங்கட்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் போது, மைதானத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே நியூசிலாந்து அணியின் கேப்டன் கிறிஸ் வுட் கொடுத்த […]

செய்தி விளையாட்டு

இறுதிகட்டம்வரை பரபரப்பு: சமநிலையில் முடிந்த ஆட்டம்!

  • June 16, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் அப் துலேலா அலம்ரி கோல் அடித்து சவுதி அரேபியாவிற்கு முன்னிலை தேடித்தந்த நிலையில், இறுதி நேரத்தில் மேக்ஸி அராவ்ஜோ உருகுவே அணிக்காக ஒரு கோல் அடித்து தோல்வியைத் தவிர்த்தார். உருகுவே அணியின் பயிற்சியாளர் மார்செலோ பீல்சா இந்த முடிவை ஒரு தவறவிட்ட வாய்ப்பாகக் கருதினாலும், […]

இந்தியா செய்தி

33 ஆவது சர்வதேச விருதை வென்றார் மோடி!

  • June 16, 2026
  • 0 Comments

ஸ்லோவாக்கியா நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி , அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘தி ஆர்டர் ஆப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ஸ்லோவாக்கியா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், அந்நாட்டு ஜனாதிபதி பீட்டர் பெல்லெக்ரினி இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 33-வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. 1993-ம் ஆண்டு ஸ்லோவாக்கியா […]