இலங்கை செய்தி

‘மீள்குடியேற்றம்’ – ஜுன் 15 ஆம் திகதிவரை காலக்கெடு!

  • May 13, 2026
  • 0 Comments

பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (13) பிற்பகல் பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அனர்த்த நிலைமையினால் பதுளை மாவட்டத்தில் 26,517 குடும்பங்களைச் சேர்ந்த 90,667 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 77 தோட்ட வீடுகளும் 507 கிராமிய வீடுகளும் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. அதிக ஆபத்துள்ள வீடுகளாக 1,376 தோட்ட வீடுகளும் 1,474 கிராமிய வீடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, பதுளை மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டிய மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை […]

இலங்கை செய்தி

இலங்கை, பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

  • May 13, 2026
  • 0 Comments

பெலாரசுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை, பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் மாக்சிம் ரைசென்கோவ் (Maxim Ryzhenkov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது, பெலாரசும் இலங்கையும், தங்கள் உறவுகளை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஏற்கனவே உறுதியான பலன்களைத் தந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “பெலாரசுக்கும் இலங்கைக்கும் இடையே அண்மையில் நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், […]

இலங்கை செய்தி

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டு சிறை! யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பு

  • May 13, 2026
  • 0 Comments

ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றவாளி ஒருவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழைப் பகுதியில் 1 கிராம் 440 மில்லிகிராம் (1.44 கிராம்) ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற […]

இலங்கை செய்தி

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

  • May 13, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று, யாழ். தீவகம் அல்லைப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு நாளும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத் தந்தையினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அல்லைப்பிட்டி சேமக்காலையில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில், உறவினர்களால் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி […]

இந்தியா

எரிபொருள் விலையேற்றத்தால் விமான சேவையை நிறுத்தும் ஏர் இந்தியா

  • May 13, 2026
  • 0 Comments

ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை குறைப்பதாகவும், 06 முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் சில நாடுகளின் வான்வெளி கட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே சில வழித்தடங்களில் விமான சேவைகளைக் குறைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பும் ஒகஸ்ட் வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா, டெல்லி-சிகாகோ, […]

இலங்கை செய்தி

பொலிஸாரை கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞன்: யாழில் சம்பவம்!

  • May 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது, பொலிஸாரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், தனது கையில் வைத்திருந்த ஹெரோயின் பொட்டலத்தை வாய்க்குள் போட்டுத் […]

இந்தியா செய்தி

தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏ -க்கள் பதவி பறிபோகிறதா?

  • May 13, 2026
  • 0 Comments

எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சியை மீறி சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக கட்சிக்கு ஆதரவளித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு எதிராக கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு காணப்படுவதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சட்ட நிபுணர்களின் விளக்கப்படி, கட்சி தாவலை தடுக்கும் நோக்கில் 1985ஆம் ஆண்டு 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் 10வது அட்டவணை சேர்க்கப்பட்டது. இதன்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் தானாகவே தனது கட்சியிலிருந்து விலகினால் அல்லது […]

இந்தியா செய்தி

பிரதமர் மோடி முக்கிய 5 நாடுகளுக்கு விஜயம்!

  • May 13, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கமைய மே 15 முதல் 20 வரை இவ்விஜயம் இடம்பெறவுள்ளது. முதலாவதாக மே 15 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அந்நாட்டு ஜனாதிபதி உட்பட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். அதனை தொடர்ந்து, நெதர்லாந்து (மே 15-17), ஸ்வீடன் (மே 17-18), நோர்வோ (மே 18-19) மற்றும் இத்தாலி (மே […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரச பதவி ரத்து!

  • May 13, 2026
  • 0 Comments

ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் , தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. “ ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை முதல்வரின் சிறப்புப் பணி (அரசியல்) அதிகாரியாக நியமிப்பது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இந்நியமனத்துக்கு […]

உலகம் கல்வி

ஹார்முஸ் நீரிணை: அமெரிக்கா பக்கம் சாய்கிறது தென்கொரியா!

  • May 13, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தென்கொரியா தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தென்கொரிய கப்பலொன்று அண்மையில் ஹார்முஸ் நீரிணை பகுதியில் அங்குத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இந்த விவகாரத்தில் படிப்படியாகப் பங்களிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம் தகவல் பரிமாற்றம் மற்றும் ராணுவ வீரர்களை அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளில் தென்கொரியா ஈடுபட வாய்ப்புள்ளது. ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், இப்பகுதியைப் பாதுகாக்க அமெரிக்கா தனது […]

error: Content is protected !!