கண்ணிவெடி அகற்றல் பணியை துரிதப்படுத்துமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு
வடக்கு மாகாணத்தில் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார மேம்பாடு மற்றும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலாத்துறை (Tourism) சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏதுவாக, கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஆளுநர் தலைமையில் இன்று (21.08.2026) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. […]













