மத்தியதரைக் கடலில் இயங்கிய ஆட்கடத்தல் வலையமைப்பை முறியடித்த ஸ்பெயின்
மத்தியதரைக் கடலில் இயங்கி வந்த மிகப்பெரிய ஆட்கடத்தல் வலையமைப்புகளில் ஒன்றை முறியடித்துள்ளதாக ஸ்பெயின் பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர். இந்த வலையமைப்பு 2,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை நாட்டிற்குள் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது. இது தொடர்பில் ஸ்பெயினின் குடிமைப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்தியதரைக் கடலில் இதுவரை கண்டறியப்பட்ட மிகவும் சிக்கலான, தீவிரமான மற்றும் ஆபத்தான பன்னாட்டு குற்ற வலையமைப்புகளில் ஒன்றை, குடிமைப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய காவல்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. MDMA போன்ற போதைப்பொருட்களுக்கான […]




