கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் விபத்து
ஏதென்ஸுக்கு மேற்கே இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக கிரீஸ் காட்டுத்தீயுடன் போராடி வருகின்றது. இந்நிலையில் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. தீயணைப்புத் துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்டு, நான்கு பணியாளர்களுடன் பயணித்த இரண்டு பெல் ஹெலிகாப்டர்கள், ப்சாதா (Psatha) பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நடுவானில் மோதிக்கொண்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது. பணியாளர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டன. […]



