உலகம்

டெக்சாஸில் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

  • July 18, 2026
  • 0 Comments

டெக்சாஸில்  கடுமையான வெள்ளத்தில் சிக்கிய சிறுமி ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வெள்ளத்தில் சிக்கி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட்டின் (Greg Abbott’) அலுவலகத்தால் பகிரப்பட்ட காணொளியில், அந்தச் சிறுமி மீட்கப்பட்டதும், அவரது குடும்பத்தினர் மற்றும் இரண்டு நாய்களும் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றப்பட்டதும் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே டெக்சாஸ் மலைப்பகுதி முழுவதும் பெய்த கனமழையால், ஆறுகள் பெருக்கெடுத்து   உயிருக்கு ஆபத்தானவையாக மாறியுள்ளன. மேற்படி வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான சாலைகளை அடித்துச் […]

உலகம்

வியட்நாமில் கடும் மழை – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நால்வர் உயிரிழப்பு

  • July 18, 2026
  • 0 Comments

வியட்நாமின் வடக்கு மாகாணமான லை சாவில் உள்ள  மலைக் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேரை காணவில்லை என்றும்  அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வியட்நாமின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள் சாலைகள், மின் கட்டமைப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகளைச் சேதப்படுத்தியதோடு, அப்பகுதியில் 238 ஹெக்டேர் பயிர்களையும் மூழ்கடித்துள்ளதாக […]

இலங்கை செய்தி

பேரிடரால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

  • December 12, 2025
  • 0 Comments

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (12 ) மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 211 பேரை காணவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 713 வீடுகள் முழமையாகவும், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 805 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 26 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் […]

இலங்கை செய்தி

26,841 குடும்பங்கள் தொடர்ந்து இடைத்தங்கள் முகாம்களில்!

  • December 11, 2025
  • 0 Comments

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 203 பேர் காணாமல்போயுள்ளனர். 5 ஆயிரத்து 350 வீடுகள் முழமையாகவும், 86 ஆயிரத்து 245 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 26 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன. மண்சரிவு மற்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களுக்கு இடமில்லை!

  • December 10, 2025
  • 0 Comments

“ அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.” என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார். “ அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான பொதுவான திட்டமொன்றை முன்வைத்து, அதற்கேற்பச் செயற்பட வேண்டும். கொழும்பு மாவட்டத்தினுள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களின் […]