செய்தி

வான்வழி கண்காணிப்பை வலுப்படுத்த சவூதியிடம் உதவி கோரியது இலங்கை!

  • February 16, 2026
  • 0 Comments

இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ,சவூதி கடற்படை (RSNF) தளபதி வைஸ் அட்மிரல் Mohammed bin Abdulrahman Al-Ghribi உடன் உயர் மட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார். கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பாதுகாப்பு அமைச்சில், World Defence Show (WDS) 2026 நிகழ்வின் போது நடைபெற்றது. இலங்கை ஒரு தீவாக இருப்பதினால், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல், மனிதக் கடத்தல், […]

இலங்கை செய்தி

யாழ். வலி.வடக்கில் ஏப்ரலில் காணி விடுவிப்பு!

  • February 16, 2026
  • 0 Comments

“ யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளில் ஒரு தொகுதி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளன.” இவ்வாறு கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekar தெரிவித்தார். மக்களுடைய காணிகளை அவர்களிடமே மீள ஒப்படைக்க வேண்டும் என்பதில் தற்போதைய அரசு உறுதியான நிலைப் பாட்டில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். “ பாதுகாப்புத் தேவைகளைக் கருத்திற்கொண்டு வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் காணிகள் படையினரின் வசமிருக்க வேண்டிய தேவை […]

இலங்கை செய்தி

O/L பரீட்சை நாளை ஆரம்பம்: கல்வியால் வடக்குக்கு பெருமை சேர்க்க ஆளுநர் அழைப்பு!

  • February 16, 2026
  • 0 Comments

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை (O/L) நாளை செவ்வாய்க்கிழமை (17.02.2026) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் ” பரீட்சைக்குத் தோற்றும் எமது அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கடந்த காலப் பின்னடைவுகளைத் தகர்த்தெறிந்து, இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் நீங்கள் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளவை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் குடியேற்றக் கொள்கையை கடுமையாக்க லிபரல் கட்சி திட்டம்!

  • February 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள Angus Taylor, தமது ஆட்சியில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்குவதற்குரிய உறுதிமொழியை வழங்கியுள்ளார். இதற்கமைய ஆஸ்திரேலியாவுக்குள் வரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்போகிறாராக உறுதியளித்துள்ளார். “Australia வாழ்க்கை முறையையும் அடிப்படை மதிப்புகளையும் ஏற்காதவர்களுக்கு நாட்டின் கதவுகள் திறந்திருக்காது” என்று Angus Taylor எச்சரித்துள்ளார். தற்போதைய குடியேற்றத் திட்டத்தில் தரநிலைகள் தளர்ந்து, எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதனால் வீட்டு வசதி, உள்கட்டமைப்பு மற்றும் சமூக சேவைகள் மீது அதிக […]

விளையாட்டு

இலங்கை, ஆஸ்திரேலியா இன்று மோதல்!

  • February 16, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் பலம்பொருந்திய இரு அணிகள் இன்று (18) பலப்பரீட்சை நடத்துகின்றன. இலங்கை Sri Lanka மற்றும் ஆஸ்திரேலியா Australia அணிகள் மோதும் ஆட்டம் இரவு 7 மணிக்கு கண்டி , பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலகக்கிண்ண தொடரில் தான் எதிர்கொண்ட முதல் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது, இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துவிடும். சிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணிக்கு, அடுத்த சுற்று தொடர்பான எதிர்பார்ப்பை […]

இலங்கை செய்தி

சுயாட்சி அம்சங்களுடன் புதிய அரசமைப்பு வேண்டும்: தமிழ்க் கட்சிகள் தீர்மானம்!

  • February 16, 2026
  • 0 Comments

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது என்று யாழ்ப்பாணத்தில் Jaffna நேற்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் Tamil National Council ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். தற்போதைய அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் […]

இலங்கை செய்தி

17 ஆம் திகதி இலங்கை வருகிறார் பிரிட்டன் துணை பிரதமர்!

  • February 15, 2026
  • 0 Comments

பிரிட்டன் துணைப் பிரதமரான டேவிட் லம்மி David Lammy , எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) இலங்கைக்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொள்கின்றார். இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரையும் அவர் சந்திப்பார் என தெரியவருகின்றது. மேலும், “குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான உலகளாவிய சாசனம்” (Charter for the Global Campaign […]

இலங்கை செய்தி

டெல்லி விஜயத்தின்போது பிரான்ஸ் ஜனாதிபதியை சந்திக்க அநுர திட்டம்!

  • February 15, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு AI Impact Summit டெல்லியில் நாளை ஆரம்பமாகின்றது. எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் உச்சி மாநாட்டில் அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்பார் என தெரியவருகின்றது. எனினும், […]

அரசியல் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு: அரசு உறுதி!

  • February 15, 2026
  • 0 Comments

“தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஊடாக நிச்சயம் தீர்வு காணப்படும். புதிய அரசமைப்புக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது.” என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் undaralingam Pradeep தெரிவித்தார். “ இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் அதிகாரத்துக்காக தீர்வை கொண்டுவருவதைவிட நிலையான தீர்வை அடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஜனரஞ்சக முடிவுகளைவிட,  அனைத்து மக்களும் ஏற்கும் முடிவாக அது அமைய வேண்டும். தமிழ் பேசும் மக்கள் […]

செய்தி

பங்களாதேஷின் புதிய பிரதமர் 17 ஆம் திகதி பதவியேற்பு: 13 நாடுகளுக்கு அழைப்பு!

  • February 15, 2026
  • 0 Comments

பங்களாதேஷின் புதிய பிரதமராக பி.என்.பி. BNP கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் tarique rahman நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (17) பதவியேற்கவுள்ளார். நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கை, சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]