உலகம் செய்தி

ஈரான், அமெரிக்கா மீண்டும் பேச்சு நடத்த வேண்டும்: 10 நாடுகள் கூட்டாக வலியுறுத்து!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் நிரந்தர போர் நிறுத்த ஏற்பட வேண்டும் என ஆசியான் ASEAN நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இஸ்லாபாமாத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையிலேயே மேற்படி வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய வர்த்தகத்திற்கு அவசியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆசியான் வெளிவிவகார அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிசக்தி இறக்குமதிக்கு ஹார்முஸ் நீரிணை வழியை பெரிதும் நம்பியிருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு சுமூகமான சூழலை ஏற்படுத்துமாறு கோரியுள்ளன.

பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகளைப் பாராட்டியுள்ள அமைச்சர்கள், இரு இருநாடுகளுக்கும் இடையில் அமைதி பேச்சு தொடர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

ASEAN என்றழைக்கப்படும் (Association of Southeast Asian Nations) கூட்டணியில் சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து,மலேசியா, இந்தோனேசியா மற்றும் மியன்மார் உட்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி