அரசியல் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு: அரசு உறுதி!

  • February 15, 2026
  • 0 Comments

“தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஊடாக நிச்சயம் தீர்வு காணப்படும். புதிய அரசமைப்புக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது.” என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் undaralingam Pradeep தெரிவித்தார். “ இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் அதிகாரத்துக்காக தீர்வை கொண்டுவருவதைவிட நிலையான தீர்வை அடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஜனரஞ்சக முடிவுகளைவிட,  அனைத்து மக்களும் ஏற்கும் முடிவாக அது அமைய வேண்டும். தமிழ் பேசும் மக்கள் […]

செய்தி

பங்களாதேஷின் புதிய பிரதமர் 17 ஆம் திகதி பதவியேற்பு: 13 நாடுகளுக்கு அழைப்பு!

  • February 15, 2026
  • 0 Comments

பங்களாதேஷின் புதிய பிரதமராக பி.என்.பி. BNP கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் tarique rahman நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (17) பதவியேற்கவுள்ளார். நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கை, சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து வேட்டை!

  • February 14, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு என்பவற்றை முற்றாக நிராகரிக்கும் கையெழுத்துப் போரட்டம் ஆரம்பமாகியுள்ளது. திருகோணமலையில் இன்று (14) சனிக்கிழமை இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வின்போதே கையெழுத்து வேட்டை ஆரம்பமானது. திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதலில் கையொப்பம் இட்டனர். அதன்பின்னர் நிகழ்வில் பங்கேற்ற ஏனையோர் கையெழுத்திட்டனர். […]

பொழுதுபோக்கு

காதல் மழை பொழிந்த நயன்தாரா!

  • February 14, 2026
  • 0 Comments

காதலர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும், பலகோணங்களில் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்தே கரம் பிடித்தனர். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்று இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல்: பிரதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி!

  • February 14, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் Sundaralingam Pradeep தெரிவித்தார். தேர்தலை இழுத்தடிப்பு செய்யும் எந்தவொரு நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை எனவும், சட்டரீதியிலான ஏற்பாடுகள் முடிந்த பின்னர் அது நடக்கும் எனவும் அவர் கூறினார். மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு எதிரணிகள் அரசாங்கத்துக்கு சவால் விடுத்துவருகின்றன. மக்கள் மத்தியில் தமக்குரிய செல்வாக்கு சரிந்துள்ளதால் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது எனவும் எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்நிலையிலேயே பிரதி அமைச்சர் Sundaralingam Pradeep மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

செய்தி

இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

  • February 14, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் 23 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து England அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. Eden Gardens மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து Scotland அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 155 ஓட்டங்களைப் பெற்று, 5 […]

செய்தி

புறாக்கள் உயிரோடு எரிப்பு: நெடுந்தீவில் கொடூரம்!

  • February 14, 2026
  • 0 Comments

இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்திவரப்பட்டு, நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. பொலிஸாரைக் கண்டதும் அச்சம் காரணமாக உரிமையாளர்களால் இந்த கொடூரச் செயல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர், இந்தியாவிலிருந்து 144 புறாக்கள் கடல் மார்க்கமாக நெடுந்தீவுக்குக் கடத்தி வரப்பட்டுள்ளன. அங்கிருந்து பகுதி பகுதியாக யாழ்ப்பாணத்திற்குப் புறாக்களைக் கடத்தத் திட்டமிட்டிருந்தனர். நேற்று முதற்கட்டமாக 44 புறாக்களைக் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது, கடற்படையினர் அவற்றை வழிமறித்து மூவரைக் கைது செய்தனர். […]

இலங்கை செய்தி

14 வருடங்களுக்கு பிறகு விசேட கூட்டம்: கொழும்பில் நாளை அணிதிரளும் சட்டத்தரணிகள்!

  • February 14, 2026
  • 0 Comments

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டமொன்று நாளை (15) மாலை 3 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள பின்புலத்திலேயே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களையும் கொழும்பு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகே இவ்வாறானதொரு விசேட கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல் சம்பவத்தை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் […]

இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: விசாரணை வேட்டை தீவிரம்!

  • February 14, 2026
  • 0 Comments

தென்னிலங்கையில் சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை வேட்டை இடம்பெற்றுவருகின்றது. இதற்காக 10 விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) மாலை 5 மணியளவிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது. அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து, காரில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த குற்றச் செயலை புரிந்துள்ளனர். ஜீப் வாகனத்தின் இருந்த சட்டத்தரணியையும் அவரது மனைவிமீதும் துப்பாக்கிச்சூடு […]

இலங்கை செய்தி

உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து!

  • February 14, 2026
  • 0 Comments

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச் சலுகையைத் தொடர்வதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை சரியான நேரத்தில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம்–இலங்கை கூட்டு ஆணையம் 27வது அமர்வு கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றபோது இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது. ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தின் கீழ் உள்ள 27 முக்கிய சர்வதேச உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதில் தமது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவற்றின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு காலமுறைப்படி […]