யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 437 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • July 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆம் நாள் அகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இன்றைய அகழ்வின் போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்தியுள்ளார். அத்துடன் மோதலை மேலும் விரிவுபடுத்தப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். செய்தி

ட்ரம்பின் போர் யுக்தி இம்முறை கைகூடுமா?

  • July 18, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்தியுள்ளார். அத்துடன் மோதலை மேலும் விரிவுபடுத்தப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். எனினும், தெஹ்ரானை (ஈரான்) பணியவைப்பதில் ஏற்கனவே தோல்வியடைந்த இந்த இராணுவ உத்தி, இந்த முறையும் பலன் தருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இரு தரப்பும் இதுவரை முழு அளவிலான போரைத் தவிர்த்து வந்த போதிலும், இந்த நெருக்கடியிலிருந்து விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மங்கிப்போயுள்ளது. இந்தச் சூழல் உலகளாவிய கச்சா எண்ணெய் […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று, லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன் (Joseph Aoun) வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். செய்தி

ட்ரம்பை சந்திப்பதற்காக வாஷிங்டன் பறந்தார் லெபனான் ஜனாதிபதி

  • July 18, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று, லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன் (Joseph Aoun) வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது குறித்து பெய்ரூட்டில் உள்ள ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளை மாளிகையில் இருதரப்பு உச்சி மாநாடு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, லெபனானின் தற்போதைய நிலைமை மற்றும் அங்கு போர் நிறுத்தத்தை வலுப்படுத்துவதற்கான சாத்தியமான வழிமுறைகள் பற்றி கலந்துரையாடப்படவுள்ளது. லெபனான் மற்றும் குறிப்பாக தெற்குப் பகுதியில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுப்பது, லெபனானின் ஆக்கிரமிக்கப்பட்ட […]

ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் அஸ்ராக் (Azraq) விமானத் தளம் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது. உலகம் செய்தி

ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் தாக்குதல்

  • July 18, 2026
  • 0 Comments

ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் அஸ்ராக் (Azraq) விமானத் தளம் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது. இது தொடர்பாக IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜோர்டானின் அல்-அஸ்ராக் பகுதியில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தில் உள்ள போர் விமானப் பாதுகாப்புப் பெட்டகங்கள் (Fighter jet shelters) மற்றும் பெரிய ரன்வே (Aircraft parking ramp) ஆகியவற்றைக் குறிவைத்து, கடுமையான மற்றும் ஒரே நேரத்திலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை […]

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”க்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா செய்தி

டெல்லியில் பரபரப்பு: 21 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வலுக்கட்டாயமாக வைத்தியசாலையில் சேர்ப்பு

  • July 18, 2026
  • 0 Comments

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”க்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டங்கள் […]

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. அறிவியல் & தொழில்நுட்பம் இந்தியா செய்தி

இந்திய விண்வெளி வரலாற்றில் முக்கிய மைல்கல்

  • July 18, 2026
  • 0 Comments

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது தனியார் தயாரிப்பான ‘விக்ரம்-1’ (Vikram-1) சுற்றுப்பாதை ஏவுகலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 22 மீட்டர் உயரமும், நான்கு நிலைகளையும் (four-stage) கொண்ட இந்த ராக்கெட் வானத்தை நோக்கிச் சீறிப் பாய்ந்தபோது, அது மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு ஒரு வரலாற்றுத் தருணமாக […]

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்க, அதற்காகப் பொருத்தமான காணிகளை உடனடியாக அடையாளப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை செய்தி

வடக்கில் புதிய கைத்தொழில் பேட்டைகள்: காணிகளை அடையாளம் காண ஏற்பாடு

  • July 18, 2026
  • 0 Comments

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்க, அதற்காகப் பொருத்தமான காணிகளை உடனடியாக அடையாளப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்துக்குப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர் , வடக்கு மாகாண ஆளுநரை நேற்று (17.07.2026) வெள்ளிக்கிழமை இரவு ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போதே […]

ஈரானின் இராணுவ நிலைகள் மற்றும் தளவாடக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ச்சியாக ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் சனிக்கிழமை (18) மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதனால் பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் முற்றுகை – ஈரானின் பதிலடி: நடுங்கும் வளைகுடா நாடுகள்

  • July 18, 2026
  • 0 Comments

ஈரானின் இராணுவ நிலைகள் மற்றும் தளவாடக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ச்சியாக ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் சனிக்கிழமை (18) மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதனால் பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ளது. இருதரப்பும் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளையும் இலக்கு வைத்துள்ளன. ஈரான் மீது தாங்கள் கடற்படை முற்றுகையை அமுல்படுத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேநேரம், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைத் தீர்மானிக்கும் […]

"தமிழர் விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாகச் செயல்படவில்லை" என்று வட மாகாண முன்னாள் முதல்வரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

தமிழர் பிரச்சினைகளை மறந்து செயல்படுகிறத அநுர அரசு

  • July 18, 2026
  • 0 Comments

“தமிழர் விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாகச் செயல்படவில்லை” என்று வட மாகாண முன்னாள் முதல்வரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “தற்போதைய அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் குறித்துக் குறை கூற முடியாது. அவர்களுக்கு அனுபவம் சற்றுக் குறைவாக இருப்பதால் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனினும், அவர்கள் ஊழல்களில் இருந்து ஒதுங்கியுள்ளனர்; போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அரசு நிறுவனங்களுக்கான […]

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமோபோபியா (Islamophobia) தொடர்பான சிறப்புத் தூதரின் அறிக்கை குறித்து அல்பானிஸ் அரசாங்கம் தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பதிலை சனிக்கிழமை (18) வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட திருத்தக் கோரிக்கையை நிராகரித்தது ஆஸ்திரேலியா அரசு

  • July 18, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமோபோபியா (Islamophobia) தொடர்பான சிறப்புத் தூதரின் அறிக்கை குறித்து அல்பானிஸ் அரசாங்கம் தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பதிலை சனிக்கிழமை (18) வெளியிட்டுள்ளது. இதில், நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை மாற்றி அமைப்பதற்கான கோரிக்கைகளை நிராகரித்துள்ள அரசாங்கம், அதற்குப் பதிலாக கல்வி சார்ந்த ஒரு புதிய பணிக்குழுவை அமைப்பதற்கும், காவல்துறையின் சமூகத் தொடர்புப் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும் முன்னுரிமை அளித்துள்ளது. கல்வி மற்றும் விழிப்புணர்வு, பாதுகாப்பு மற்றும் ஆதரவு, சமூக ஒற்றுமை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய துறைகளின் கீழ் […]