உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை வெகுவிரைவில் திறக்கப்படும்: ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணைப் பகுதியை Strait of Hormuz வெகு விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump உறுதியளித்துள்ளார். பாகிஸ்தானில் இன்று (11) இடம்பெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணையைத் திறக்கும் பணி சவாலானது என்றாலும், ஈரான் ஒத்துழைக்காத பட்சத்திலும் அமெரிக்கா தனித்துச் செயல்பட்டு அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறினார். சர்வதேச சந்தையில் நிலவும் எரிசக்தி […]

உலகம் செய்தி

ஒட்டுமொத்த உலகையும் திருப்பிபார்க்க வைத்த ஈரான் சபாநாயகரின் X பதிவு!

  • April 11, 2026
  • 0 Comments

அமைதி பேச்சுக்காக இஸ்லாமாபாத் வருவதற்கு முன்னர் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் பதிவிட்ட எக்ஸ் பதிவானது உலகின் கவனர்த்தை ஈர்த்துள்ளது. அவர் வெளியிட்ட படமும், அதற்கு வழங்கிய தலைப்பும் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றது. ஈரான் மினாப் நகரில் பாடசாலைமீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 168 மாணவர்கள் பலியானார்கள். ஈரான் பேச்சுக்குழு பயணித்த விமானத்தில் முன் இருக்கையில் உயிரிழந்த மாணவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயல் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் துயரத்தையும் அதன் தூதரக முயற்சிகளையும் உலகுக்கு அடையாளப்படுத்துகிறது. […]

உலகம் செய்தி

அமைதி பேச்சு இன்று: 71 பேரடங்கிய உயர்மட்ட குழுவை களமிறக்கியது ஈரான்!

  • April 11, 2026
  • 0 Comments

  ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப் Mohammed-Baqer Qalibaf தலைமையில் 71 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சுவார்த்தை இன்று (11) இஸ்லாமாபாத்தில் நடைபெறுகின்றது. இதில் பங்கேற்கவுள்ள ஈரான் தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் போன்ற மிக முக்கியமான தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். நிபுணத்துவ ஆலோசகர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் அடங்கிய இந்த விரிவான […]

உலகம் செய்தி

ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் 1,400 பேரின் கதையை முடித்துவிட்டோம்: மார்தட்டுகிறது இஸ்ரேல்!

  • April 10, 2026
  • 0 Comments

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பு மேற்படி தகவலை இன்று (10) வெளியிட்டுள்ளது. தெற்கு லெபனானில் முன்னெடுக்கப்பட்ட தீவிர ராணுவ நடவடிக்கையின்போது ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயிரக்கணக்கான தளங்கள் அழிக்கப்பட்டன எனவும் இஸ்ரேல் கூறியுள்ளது. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பல நாடுகள் முயற்சித்துவரும் சூழ்நிலையில், லெபனான்மீதான இஸ்ரேலின் கோரத் தாக்குதல் அமைதி முயற்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. போர் நிறுத்த பொறிமுறைக்குள் லெபனானையும் உள்வாங்குமாறும், அந்நாடுமீதான தாக்குதலை […]

உலகம் செய்தி

இஸ்ரேல், ஸ்பெயினுக்கிடையில் ராஜதந்திர போர் வெடிப்பு!

  • April 10, 2026
  • 0 Comments

காசா போர்நிறுத்த நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து Gaza ceasefire coordination hub ஸ்பெயினை நீக்குவதற்கு இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu நடவடிக்கை எடுத்துள்ளார். ஈரான்மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை ஸ்பெயின் கடுமையாக விமர்சித்ததே நிலையிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் நிலைப்பாடு இஸ்ரேலிய படையினரை அவமதிப்பதாகக் கருதும் நெதன்யாகு, தங்கள் நாட்டிற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஸ்பெயினுக்கு இடையிலான இந்த மோதல் சர்வதேச அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு புதிய […]

உலகம் செய்தி

பாதுகாப்பு வளையத்திற்குள் இஸ்லாமாபாத்! படைகள் குவிப்பு!!

  • April 10, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மிகத்தீவிரமான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தை நாளை (11) இடம்பெறவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 10,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், தலைநகர் முழுவதும் முழு அடைப்பு (லொக்டவுன்) நிலையில் காணப்படுகிறது. புhடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில தொழில்நுட்பக் காரணங்களால் திட்டமிடப்பட்ட கூட்டம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டாலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஏற்கனவே வருகை தரத் […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!

  • April 10, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று காலை முதல் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் நிறைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக, 153 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். 49 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, 104 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும், […]

உலகம் செய்தி

லெபனானில் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு: தலைதூக்கும் மனிதாபிமான நெருக்கடி!

  • April 10, 2026
  • 0 Comments

லெபனானில் தீவிரமடைந்து வரும் மோதல்களால் ஏற்பட்டுள்ள கடுமையான மனிதாபிமான நெருக்கடி குறித்து உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் உக்கிர தாக்குதல்களால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளுக்குரிய நிதிய ஐக்கிய நாடுகள் சபை தற்போது வழங்கி வருகிறது. எனினும், இந்த உயிர் காக்கும் […]

இந்தியா

வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்: உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா!

  • April 10, 2026
  • 0 Comments

தமது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா Yashwant Verma , தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் கடிதம்மூலம் தெரியப்படுத்தியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதன்போத அவர் வீட்டில் இருக்கவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொலிஸார் வீட்டில் தீயை […]

உலகம் செய்தி

ஹர்முஸ் நீரிணை திறப்பு: இந்திய, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு!

  • April 10, 2026
  • 0 Comments

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தடையின்றி இடம்பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என இரு நாட்டு அமைச்சர்களும் வலியுறுத்தினர். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்தவும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளன. மேற்காசிய போரால்; உயிரிழந்த இந்தியர்களுக்காக ஜப்பான் அமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டார்.