உலகம் செய்தி

ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஈரானுக்கு அழைப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் அடுத்த வாரம் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பில் சீனாவே, ஈரானுக்கு இந்த அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்துள்ளது. எனினும், இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. சீனாவிடமிருந்து அழைப்பு கிடைத்துள்ளதால் இது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படலாம் என தெரியவருகின்றது. உலகளாவிய ரீதியில் அமைதியை […]

அரசியல் இலங்கை செய்தி

அதிகாரப் பகிர்வு அவசியம்: ஜனாதிபதி முன்னிலையில் சுமந்திரன் வலியுறுத்து!

  • May 20, 2026
  • 0 Comments

”நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத்தைத் திறக்கும் நிகழ்வில் இன்று உரையாற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். […]

இலங்கை செய்தி

வாழைச்சேனை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

  • May 20, 2026
  • 0 Comments

கிராமப்புற வீதி நிர்மாணம், குடிநீர் விநியோகம் மற்றும் திடக்கழிவுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (20) முற்பகல் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான நீர் வழங்கல் திட்டங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இணைந்து […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் கையளிப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். இதற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் புதிய நூலகக் கட்டிடத்தில், சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப […]

இந்தியா உலகம் செய்தி

இரு தரப்பு உறவு வலுவடையும்: இந்தியா, இத்தாலி பிரதமர்கள் உறுதி!

  • May 20, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் ஆழப்படுத்துவதற்கு இரு நாடுகளின் பிரதமர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். அதன்பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். “இந்தியா- இத்தாலி உறவு முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் விரிவடைந்து தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, ஒரு சுமூகமான நட்பிலிருந்து சுதந்திரம், ஜனநாயகம், எதிர்காலத்துக்கான ஒரு பகிரப்பட்ட […]

உலகம் செய்தி

போரால் இஸ்ரேல் விமான நிறுவனத்துக்கு பேரிழப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

ஈரான் மீதான போர் நடவடிக்கைகளின் காரணமாக, இஸ்ரேலின் தேசிய விமான சேவை நிறுவனமான ‘எல் அல்’ (El Al) கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. போர்ச் சூழல் காரணமாக வான்வெளிகள் மூடப்பட்டதால், வணிக ரீதியிலான பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் விளைவாக, நடப்பு ஆண்டின் முதலாவது காலாண்டில் மட்டும் ‘எல் அல்’ நிறுவனம் சுமார் 67 மில்லியன் டாலர் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியின் லாபத்துடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் தற்போதைய வருவாய் 27 […]

இந்தியா செய்தி

செப்டம்பரில் இந்தியா வருகிறார் புடின்!

  • May 20, 2026
  • 0 Comments

BRICS நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வருகின்றார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. குறித்த அமைப்பின் 2026-ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் உள்ளது. இந்நிலையில் மே 14ஆம் திகதி பிரிக்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

படையினருக்காக நாம் களமிறங்குவோம்: ராஜபக்சவின் மகன் சூளுரை!

  • May 20, 2026
  • 0 Comments

“எவ்வாறான அச்சுறுத்தல்கள், சவால்கள் வந்தாலும் ஒற்றையாட்சி மற்றும் ராணுவத்தை பாதுகாப்பதற்கு நாம் எப்போதும் முன்நிற்போம்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “நாம் தமிழர்களுக்கு எதிராக போர் செய்யவில்லை. புலிகளுக்கு எதிராகவே போர் முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பவர்களுக்கு நினைவுகூர இடமளிக்கப்படுகின்றது. ஆனால் விமல் வீரவன்சவுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஆளுந்தரப்பு வெக்கப்பட வேண்டும். அதேவேளை, பொருளாதாரம் […]

செய்தி விளையாட்டு

ஓரிடத்துக்காக 5 அணிகளுக்கிடையில் போட்டி!

  • May 20, 2026
  • 0 Comments

2026 IPL கிரிக்கெட் தொடரில் play-off சுற்றில் வெற்றிடமாக உள்ள ஓரிடத்துக்கு வாய்ப்பை பெறுவதற்கு 5 அணிகளுக்கிடையில் போட்டி நிலவுகின்றது. கடந்த தொடர்களை விடவும் இம்முறை IPL சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை ஏற்கனவே play-off சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (18 புள்ளிகள்) அணி, முதல் அணியாக play-off சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் […]

செய்தி விளையாட்டு

கொல்கத்தா அணியின் தலைவிதி இன்று நிர்ணயம்!

  • May 20, 2026
  • 0 Comments

IPL 2026 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 65 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் கொல்கத்தா அணியின் play off வாய்ப்பு சற்று அதிகரிக்கும். அதேவேளை, ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் கொல்கத்தாவின் playoff வாய்ப்பு சரிந்து பிற அணிகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

error: Content is protected !!