இலங்கை செய்தி

சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக வியூகம் வகுக்கும் இலங்கை

  • June 16, 2026
  • 0 Comments

இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, அமைச்சர் விஜித ஹேரதின் தலைமையில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. சுற்றுலாத்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தடைகளை நீக்கி, இலங்கையை ஒரு நிலையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களை இணைத்து விசேட சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவு குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது. இதன்கீழ் தெற்கு மற்றும் […]

உலகம் செய்தி

ஈரானின் அணு ஆயுத கனவு தகர்ப்பு

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள புதிய அமைதி உடன்படிக்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் G7 உச்சி மாநாட்டில் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்காது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வரவிருக்கும் வெள்ளிக்கிழமை முதல் சுவிட்சர்லாந்தில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட உள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் நீக்கம் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இதில் […]

ஐரோப்பா செய்தி

புடினை விமர்சித்த ஓவியர் போலந்தில் சுட்டுக்கொலை

  • June 16, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைத் தொடர்ந்து விமர்சித்து வந்த பிரபல ரஷ்ய ஓவியர் ஒருவர், போலந்து நாட்டில் ‘மரணதண்டனை’ பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் போலந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். Semyon Skrepetsky என்ற புனைப்பெயரில் புகழ்பெற்ற 44 வயதுடைய Robert Kuzovkov என்ற ஓவியரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெலாரஸ் எல்லையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலந்தின் Biała Podlaska நகரில் திங்கட்கிழமை காலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுப்பதில் G-7 நாடுகள் உறுதி

  • June 16, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது எரிசக்தி விலைகளைக் குறைக்க உதவும் என்று பிரித்தானிய பிரதமர் Keir Starmer நம்பிக்கை வெளியிட்டுள்ளார். G7 மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். ஹார்முஸ் நீரிணைமீள திறக்கப்படுவது பிரித்தானியாவுக்கு மிக முக்கியமானதும் என்று அவர் குறிப்பிடுகிறார். அமைதி ஒப்பந்தம் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டமை தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இதர தூதர்களுக்கு பிரித்தானிய பிரதமர், பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதில் G7 […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக அரசியலில் பரபரப்பு-தொடரும் ராஜினாமா

  • June 16, 2026
  • 0 Comments

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா முடிவடைந்திருந்தாலும், தமிழக அரசியல் களம் இன்னும் பரபரப்பாகவே உள்ளது. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் நாள்தோறும் அரசியல் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கையளித்தார். சி.விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். 2011 முதல் விராலிமலை தொகுதி […]

உலகம் செய்தி

“இஸ்ரேலின் உயிர்நாடி அமெரிக்காவின் கைகளுக்குள்”

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஆதரவு இல்லாவிட்டால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “நான் இல்லாவிட்டால் இங்கு இஸ்ரேல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இஸ்ரேலுக்காக நான் செய்த காரியங்களைச் செய்வதற்கு வேறு எந்தவொரு ஜனாதிபதியும் தயாராக இருந்திருக்கவில்லை” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தனக்கு மிகச் சிறந்த நட்பு இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், லெபனான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் […]

செய்தி விளையாட்டு

உலகக்கிண்ண தொடரில் ஈரானுக்கு பெரும் அநீதி!

  • June 16, 2026
  • 0 Comments

ஈரான் அணி வீரர்கள், உலகக்கோப்பை தொடரில் மிகுந்த அநீதிக்கு உள்ளாக்கப்படுவதாக ஈரானியக் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் Amir Ghalenoei கவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற முதல் போட்டி முடிந்தவுடன், வீரர்கள் உடனடியாக மெக்சிகோவிற்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையிலேயே, அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். விசா சிக்கல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக பயிற்சியைத் தொடங்குவதில் ஈரான் அணியினர் ஏற்கனவே பல தடைகளை எதிர்கொண்டனர். போதிய ஓய்வு மற்றும் உடல்நல […]

உலகம் செய்தி

அணு ஆயுதம் குறித்து 2ஆம் சுற்றிலேயே பேச்சு!

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று (16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைகள் இரண்டு முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டு, முதல் கட்டத்தில் ஹார்முஸ் நீரிணை விவகாரம் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் அணுசக்தி விவகாரங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பான இறுதிக் […]

இலங்கை செய்தி

கைது பயத்தில் கோட்டா: நீதிமன்றத்துக்கு ஓட்டம்!

  • June 16, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தான் கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்ககோரி , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாகவே இந்த மனுவை கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ளார். பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, […]

உலகம் ஐரோப்பா

பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் ஹமாஸ் அமைப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் Palestine Action அமைப்புக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ” இது சியோனிச (இஸ்ரேலிய) குழுக்களின் அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஓர் அரசியல் உள்நோக்கம் கொண்ட முடிவாகும்” என ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் அரங்கேற்றப்படும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஒடுக்குவதும், அச்சுறுத்துவதுமே இந்த முடிவின் நோக்கமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]