சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக வியூகம் வகுக்கும் இலங்கை
இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, அமைச்சர் விஜித ஹேரதின் தலைமையில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. சுற்றுலாத்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தடைகளை நீக்கி, இலங்கையை ஒரு நிலையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களை இணைத்து விசேட சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவு குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது. இதன்கீழ் தெற்கு மற்றும் […]













