இலங்கை ஐரோப்பா செய்தி

இலங்கைக்கு தொழில்நுட்பட ஒத்துழைப்பு வழங்க Commonwealth அமைப்பு பச்சைக்கொடி!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் காமன்வெல்த் பொதுச்செயலாளர் Shirley Ayorkor Botchwey ஆகியோருக்கு இடையில் லண்டனில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காலநிலை மாற்றம், ஜனநாயக நிர்வாகம் மற்றும் பெண்களின் அரசியல் பங்களிப்பு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். காமன்வெல்த் அமைப்பின் மூலம் இலங்கைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்களை தொடர்ந்து வழங்குவதாக பொதுச்செயலாளர் இதன்போது உறுதியளித்தார். உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை […]

இலங்கை ஐரோப்பா செய்தி

பிரிட்டன் கல்வித்துறை அறிஞர்களுடன் பிரதமர் சந்திப்பு!

  • May 22, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரிட்டன் கவுன்சிலின் (British Council) கல்வித்துறை அறிஞர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்தது. குறிப்பாக ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், ஆங்கில மொழி ஊக்குவிப்புத் திட்டங்கள், கல்விக் கட்டமைப்புகள் மற்றும் மொழித்திறன் விருத்தி ஆகிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகப் பேசப்பட்டது. இதன்போது, பிரித்தானிய கவுன்சிலின் சர்வதேச அனுபவங்கள் குறித்து விளக்கமளித்த அதன் பிரதிநிதிகள், […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட இடமளியோம்: ஜனாதிபதி திட்டவட்டம்!

  • May 22, 2026
  • 0 Comments

” 2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது. மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழலால் ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தாலும், அதனை கையாள்வதற்கான ஆளுமை அரசாங்கத்திடம் உள்ளது.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, இனவாதத்திற்கு இடமளிக்காமல் இருப்பது, ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவது, அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் […]

ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு: பிரிட்டனுடன் இணைகிறது ஜேர்மன்!

  • May 22, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கடல்வழி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டன் தலைமையிலான கடற்படைப் பணியில் இணைந்து செயல்பட ஜேர்மன் தயாராகி வருவதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul தெரிவித்துள்ளார். இது நேட்டோ அமைப்பின் ஒரு பகுதியாக இருக்காது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், போலந்தில் அமெரிக்கப் படைகளை அதிகரிப்பதை வரவேற்றுள்ள Johann Wadephul, ஜேர்மனியில் நீண்ட தூர ஏவுகணைகளை நிலைநிறுத்தும் அசல் திட்டத்தை அமெரிக்கா தொடர வேண்டும் என வலியுறுத்தினார். சர்வதேச பாதுகாப்பில் ஜேர்மனியின் ஈடுபாடு மற்றும் […]

உலகம் செய்தி

ஹர்முஸ் நீரிணையில் வரி: உலக நாடுகள் அனுமதிக்க கூடாது என்கிறது அமெரிக்கா!

  • May 22, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் Marco Rubio கவலை வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கு ஓமானின் ஆதரவைப் பெற ஈரான் முயற்சிப்பதாகவும், உலக நாடுகள் எக்காரணம் கொண்டும் இதற்குச் சம்மதிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேசக் கடல் வழிப் போக்குவரத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது முறையற்றது என்று அமெரிக்க வெளிவிவகாரச் சுட்டிக்காட்டுகிறார். நேட்டோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுவீடன் சென்றுள்ள Marco Rubio , ஈரானுடனான […]

ஐரோப்பா செய்தி

எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி! பிரான்ஸ் புது வியூகம்!!

  • May 22, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலையேற்றத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஐரோப்பா முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை குறிவைத்து இந்த வரி அமுல்படுத்தப்படவுள்ளது. பிரான்ஸ் நிதி அமைச்சர் ரொலண்ட் லெஸ்குர் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். எரிசக்தி விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட உள்நாட்டு மக்களையும், சிறு வணிகங்களையும் பாதுகாக்க பிரான்ஸ் அரசு […]

இலங்கை செய்தி

14 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 651 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். 221 வீடுகள் பகுதியளவும், ஆறு வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஆயிரத்து 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் ஆயிரத்து 469 பேரும், களுத்துறையில் ஆயிரத்து 81 பேரும் […]

ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூமீதான குற்றச்சாட்டு: விசாரணை வேட்டை தீவிரம்!

  • May 22, 2026
  • 0 Comments

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்சர்மீதான பொது அலுவலகத்தில் தவறான நடத்தை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களைத் தொடர்ந்து, அவர் தனது அரசுமுறைப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டாரா என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இந்தப் புலனாய்வு ஒரு குற்றவியல் சம்பவத்துக்கு இணையான முக்கியத்துவத்துடன் கையாளப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து கூடுதல் தகவல்களையும் காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர். […]

உலகம் செய்தி

புல்வாமா தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுட்டுக்கொலை!

  • May 22, 2026
  • 0 Comments

புல்வாமா தாக்குதலில் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சிஆர்பிஎப் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று மோதி பயங்கரமாக வெடித்தது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். வெடிபொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை எடுத்துச் சென்றது ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பைச் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

சமூக நீதித்துறை அமைச்சரானார் வன்னியரசு!

  • May 22, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு நேசக்கரம் நீட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர், வன்னியரசு அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவருக்கு சமூகநீதித் துறை அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐயூஎம்எல் கட்சியின் ஏ.எம்.ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது துறையின் கீழ் சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் அடங்கும். இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விசிகவின் […]

error: Content is protected !!