உலகம்

ஆர்ஜென்டினாவின் தூதுவரை திரும்ப அழைத்தது பிரேசில்

  • July 26, 2026
  • 0 Comments

ஆர்ஜென்டினாவின் தூதுவரை பிரேசில் திரும்ப அழைத்துள்ளது. ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜாவியர் மிலே (Javier ​Milei), பிரேசிலின் தலைவர்களையும் நீதித்துறையையும் விமர்சித்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாவியர் மிலே பிரேசில் ஜனாதிபதி பொல்சனரோவை, “குற்றவாளி என்று அழைத்தார், பிரேசில் அரசாங்கத்தை “திருடும் சோசலிஸ்டுகள்” என்று முத்திரை குத்தினார், மேலும் “லூலாவைத் தடுக்க” கன்சர்வேடிவ் வேட்பாளரால் மட்டுமே முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

உலகம்

அமெரிக்கா அதிரடி – பிரேசில் மீது 25 சதவீதம் வரிவிதிப்பு

  • July 16, 2026
  • 0 Comments

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் தனது சுங்க வரிக் கொள்கையை மறுசீரமைத்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் உலகெங்கிலும் வர்த்தகப் போர்  பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அலுவலகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய சுங்கவரி உத்தியின் கீழ் இலக்கு வைக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் ஆனது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

உலகம்

பிரேசிலில் நடுவானில் மோதிக் கொண்ட ஹெலிகாப்டர்கள் – 06 பேர் பலி!

  • June 15, 2026
  • 0 Comments

பிரேசிலில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ரியோ டி ஜெனிரோவின் மேற்கு புறநகர்ப் பகுதியான ரெக்ரியோ டோஸ் பான்டெய்ரான்டெஸ் ( Recreio dos Bandeirantes ) என்ற இடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் அமெரிக்க ஆல்ட்-பாப் பாடகரும் இணையப் பிரபலமுமான ஆலிவர் ட்ரீ உள்ளிட்ட   06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களை இன்னும் முறையாக அடையாளம் காண முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஹெலிகாப்டர்கள் மின்சார கார்கள் நிறுத்தும் இடத்தில் விழுந்தமையால் 20 […]

உலகம்

பிரேசிலில் கனமழை – 06 பேர் உயிரிழப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

பிரேசிலில் கனமழை காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் பெர்னம்புகோ (Pernambuco) மற்றும் பராய்பா (Paraiba)  மாநிலங்களில் அதிகளவிலான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன்காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பெர்னம்புகோவில், மாநிலத் தலைநகரான ரெசிஃபே மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மழைப்பொழிவால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.