உலகம்

பிரேசிலில் கனமழை – 06 பேர் உயிரிழப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

பிரேசிலில் கனமழை காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் பெர்னம்புகோ (Pernambuco) மற்றும் பராய்பா (Paraiba)  மாநிலங்களில் அதிகளவிலான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன்காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பெர்னம்புகோவில், மாநிலத் தலைநகரான ரெசிஃபே மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மழைப்பொழிவால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

error: Content is protected !!