இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராக சுரஞ்சித் வேவித்த நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2024 அக்டோபர் முதல் அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம், தனிப்பட்ட மற்றும் தொழிற்துறை சார்ந்த காரணங்களால் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தில், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றியது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்றும், தனது பதவிக் காலத்தில் இலங்கை சாதனை அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்ததையும், பல சர்வதேச விருதுகளைப் பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அதிகார சபை மற்றும் நாட்டின் நலனை கருத்திற்கொண்டு , புதிய தலைமைத்துவத்திற்குச் சீரான அதிகாரப் மாற்றத்திற்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




