சீனாவில் விநோதம் – மண்டியிட்டு யாசகம் கேட்கும் ரோபோ
சீனாவில் QR Code அட்டையுடன் ஒரு ரோபோ தெருவில் மண்டியிட்டு யாசகம் கோரும் வீடியோ வைரலாக பரவிவருகிறது.
சீனாவின் ஹாங்சோ நகரை தலைமையிடமாகக் கொண்டு யூனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனம் மனித வடிவிலான ரோபோக்களை உற்பத்தி செய்து வருகிறது. ஒரு ரோபோவின் ஆரம்ப விலை 16 இலட்சமாக (இந்திய மதிப்பில்) உள்ளது.
இந்த ரோபோக்கள் பெரும்பாலும் வீட்டு உபயோக பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தீயணைப்பு உள்ளிட்ட பேரிடர் மீட்புப் பணிகளிலும் இவை ஈடுபடுத்தப்படுகின்றன.
யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனம் தனது ரோபோக்களை மக்களிடம் பிரபலப்படுத்த நூதன விளம்பரத்தை மேற்கொண்டுள்ளது.
இதன்படி சீனாவின் சிச்சுவான் மாகாண தலைநகர் செங்டூவின் பிரதான சாலையில் ரோபோ ஒன்று QR Code அட்டையுடன் யாசகம் கோரி வருகிறது.
இந்த ரோபோ மண்டியிட்டு அமர்ந்து, கைகளை கூப்பி யாசகம் கோருகிறது. ‘‘மின்சார கட்டணத்தை செலுத்த பணம் இல்லை. எனவே யாசகம் அளித்து உதவுங்கள்’’ என்று ரோபா உருக்கமாக கூறுகிறமை குறிப்பிடத்தக்கது.





