இலங்கை

IMF இன் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  3வது தவணை தொடர்பான இரண்டாவது மீளாய்வை மார்ச் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

IMF பிரதிநிதிகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களில் இரண்டாவது மதிப்பாய்வை நடத்துவார்கள் என்று நம்பப்படுகிறது என்று நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் ஏனைய உடன்படிக்கைகளை நிறைவு செய்வது டிசம்பர் 31 ஆம் திகதி வரை மீளாய்வு செய்யப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் ஊழியர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை பெற்றுக்கொள்ளப்படும் என நம்பிக்கை வெளியிட்டதாக இராஜாங்க அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content