இலங்கை செய்தி

பொறுப்புக்கூறலை விரைவுபடுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என்றும், இது எதிர்கால முன்னேற்றம் குறித்த கவலைகளை ஏற்படுத்துகின்றது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என்றும், இது எதிர்கால முன்னேற்றம் குறித்த கவலைகளை ஏற்படுத்துகின்றது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னும் எந்தவித முன்னேற்றமுமின்றி உள்ளன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமைப் பாதுகாவலர்களும் தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகள் போன்றவற்றில் சில வரம்புக்குட்பட்ட முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ள போதிலும், மூத்த அதிகாரிகள் தொடர்புபட்ட மற்றைய முக்கிய வழக்குகளில் (உதாரணமாக, 17 உதவிப் பணியாளர்கள் படுகொலை மற்றும் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம்) எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நிறுவப்பட்ட Sri Lanka Accountability Project திட்டத்தை தற்போதைய அரசு ஏற்றுக்கொள்ளாததுடன், சுயாதீனமாக வழக்குத் தொடரும் அமைப்பையும் இதுவரையில் நிறுவவில்லை.

பல தசாப்தங்களாக நிலவி வரும் தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மையான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு விரைவுபடுத்த வேண்டும்.

நீதியை நிலைநாட்டுவதற்கான தனது உறுதிப்பாட்டைச் செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் உயர் ஆணையாளரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசை வலியுறுத்த வேண்டும்.” – என்றுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை