செய்தி

“இலங்கையில் மரண தண்டனையை அமுலாக்குவது குறித்து இன்னும் முடிவு இல்லை”

Sri Lanka Yet to Decide on Resuming the Death Penalty

இலங்கையில் மரண தண்டனையை மீள அமுல்படுத்த வேண்டும் என அமைச்சரவையில் எந்தவொரு கொள்கை ரீதியிலான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

“இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்படுமா?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

“மரண தண்டனை தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆனால், அது அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் அல்ல. அவ்வாறான எந்தவொரு கொள்கைத் தீர்மானத்தையும் அமைச்சரவை எடுக்கவில்லை என்பதைப் பொறுப்புடன் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இருப்பினும், மரண தண்டனையை அமுல்படுத்துமாறு கோரிப் பொதுமக்கள் எங்களுக்குக் கடிதங்களை எழுதி வருகின்றனர்; கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். ஆனால், அரசாங்கம் இது குறித்து எந்தவொரு கொள்கை ரீதியான முடிவையும் எடுக்கவில்லை” என்று நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி