ஸ்பெயினின் முன்னாள் போக்குவரத்து அமைச்சருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை
ஸ்பெயினின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஜோஸ் லூயிஸ் அபாலோஸுக்கு ( José Luis Ábalos) அந்நாட்டின் உச்சநீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றின் போது முகக்கவசம் வழங்குவதில் ஊழல் செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவர் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
மேலும், அவரது முன்னாள் உதவியாளர் கோல்டோ கார்சியாவுக்கு 19 ஆண்டுகளும், தொழிலதிபர் விக்டர் டி அல்டாமாவிற்கு (Víctor de Aldama) நான்கரை ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மேற்படி தீர்ப்பை அறிவித்துள்ளனர்.
இந்த மூவரும் ஊழல் நடைமுறைகள் மூலம் நிதிப் பலன்களைப் பெறும் நோக்கில், தெளிவாக வரையறுக்கப்பட்ட பணிகளுடன் ஒரு குற்றவியல் அமைப்பை உருவாக்கியதாகக் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




