பிரான்ஸில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக புதிய சட்டம்
இலவசக் கொண்டாட்டங்கள்” என்று அழைக்கப்படும், அங்கீகரிக்கப்படாத திறந்தவெளி டெக்னோ இசை ஒன்றுகூடல்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொது அமைதிக்கு இடையூறு விளைவிப்பதற்கு எதிரான சட்டமூலத்தை உருவாக்குவது தொடர்பில் பிரான்ஸின் தேசிய சட்டமன்றம் இன்று ஆய்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
பொது அமைதி, பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை சீர்குலைக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி பதில்களை” கொண்டு வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் (Laurent Nuñez ) வலியுறுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை வலதுசாரி சட்டமியற்றுபவர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்தச் சட்ட வரைவு, சிரிப்பு வாயு பயன்பாடு முதல் ஆக்கிரமிப்பு வரை பலதரப்பட்ட நடைமுறைகளைக் கையாள உள்ளது. ஆனால், குறிப்பாக இலவசக் கொண்டாட்டங்கள் தொடர்பான பிரிவின் மீது கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




