இலங்கை

மக்கள் வெளிப்படையாகச் சிந்திப்பது சிலருக்குப் பிடிக்காது – அகிலவிராஜ்

பாலியல் கல்வி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டபோது,  அதற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தன. ஆனால் தற்போது இந்த விடயங்கள் உள்வாங்கப்படாததால் தான் சமூகம் சீரழிந்து வருகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிக்கு ஒருவருடன் இருந்த  இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் காணொலியாக எடுக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது பாலியல் கல்வி குறித்தும் அது பாடத்திட்டத்தில் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசிய அவர்,  மக்கள் வெளிப்படையாகச் சிந்திப்பது சிலருக்குப் பிடிக்காது எனக் கூறினார்.

ஏழாவது புத்தகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி வழங்க வேண்டும் என்று பாடம் போட்டபோது,  ​​அதற்கு எத்தனை எதிர்ப்பு வந்தது? இவைகள் அழிந்ததால் தான் முகநூலில் இவ்வாறான பதிவுகள்  போடப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.

ஒரு இளம் பெண்ணின் ஆடையை கழற்றி வீடியோ எடுக்கும் அளவிற்கு இந்த சமுதாயத்தின் பொருளாதாரம் மட்டுமல்ல,  சமுதாயமே அழிந்துள்ளது எனவும்,
மனிதநேயம் அழிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன்  பிக்குகள் தேவையில்லாமல் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டனர்.  எமக்குப் பின் திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்திய நாடுகள் அதிவேகமாக வளர்ச்சியடைந்த போது இடதுசாரிகளின் கபடத்தனத்தால் வெறுப்பும் இனவாதமும் தலைதூக்கி நாடு பின்னோக்கி இழுக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content