இந்தியாவில் கடும் வெப்பம் – 02 நாட்களில் 40 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 02 நாட்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் உள்ள பல நகரங்களில், சிலவற்றில் வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது.
அதிக வெப்பநிலை நீரிழப்புக்கு வழிவகுக்கும் என்றும், இது இரத்த உறைவுக்கும், மேலும் கடுமையான சந்தர்ப்பங்களில் உறுப்பு செயலிழப்புக்கும் வழிவகுக்கும் என்றும் சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனவே, தெலங்கானா மாநில அரசு, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே தலைநகர் புது தில்லி மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் இந்த வாரம் முழுவதும் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை நிலவி வருவதால், வரலாறு காணாத மின்சார நுகர்வு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




