இலங்கை செய்தி

இலங்கையில் குழந்தைகளை ஊக்கப்படுத்திய சச்சின் டெண்டுல்கர்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித் டெண்டுல்கர் UNICEF அமைப்பின் தொடர் நிகழ்ச்சிகளுக்காக நேற்று இலங்கை வந்திருந்தார்.

கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு கருத்து வெளியிட்டார்.

அங்கு பேசிய டெண்டுல்கர், கல்வி என்பது வகுப்பறையில் மட்டும் நின்றுவிடக் கூடாது.

கிரிக்கெட் தனக்கு வாழ்க்கையில் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாகவும், ஒருநாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக கவனத்துடன் பணிபுரியத் தொடங்கியதாகவும், ஒழுக்கமாகவும், திட்டமிட்டு வாழவும் தொடங்கினேன் என்றார்.

வாழ்க்கையில் நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் இருப்பதாகவும், வாழ்க்கையின் கொண்டாட்டங்களையும் ஏமாற்றங்களையும் சமமாக தாங்கி வந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் உள்ள சிறுவர்களை எந்தவொரு விளையாட்டையும் விளையாட ஊக்குவிப்பதாகவும், விளையாட்டு ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை