இலங்கை செய்தி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் அமைச்சரின் கையில்

2027 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான பிரதான உற்பத்தித் திட்டத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களைச் சேர்ப்பதற்கான திட்டம் இலங்கை மின்சார சபையினால் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான திட்டமிடல் அறிக்கையை அமைச்சர் காஞ்சன விஜேசேகர மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் வளாகத்தில் கையளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு 211 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புடன் சேர்க்கப்பட்டது, இதில் 146 மெகாவாட்கள் கூரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களிலிருந்து வந்தவை.

2027 – 2030ல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து கூடுதலாக 3075 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை