இலங்கை செய்தி

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு குழு

கம்பஹா மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக விசேட குழுவொன்றை நாளை (08) கம்பஹா மாவட்டத்திற்கு அனுப்ப சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் திரு.கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்த உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க விசேட குழுவொன்றை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, நாட்டில் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தலைமையில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல்மாகாணத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக செயலணியொன்று ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர்களுக்கு நாளை சுற்று நிருபம் வெளியிடவுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 15 மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமை தொடர்பில் உடனடி கவனம் செலுத்தப்படாவிட்டால் டெங்கு நோய் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content