இனத் துவேஷம் – ஐ.நா தலைமையத்திற்கு அருகே நபர் ஒருவர் தீக்குளித்து உயிர்மாய்ப்பு
நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு அருகே நேற்று நபர் ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
குறித்த நபர் தீக்காயங்களுடன் பெல்லிவியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்திய ஊடகங்கள் அந்த நபரை லோக்பா ரங்சென் என அடையாளப்படுத்தியுள்ளன.
அவர் ஒரு திபெத்திய ஆர்வலர் மற்றும் ஊபர் ஓட்டுநர் என்றும், திபெத்தியக் கொடியுடன் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சீனாவின் புதிய இன ஒற்றுமைச் சட்டத்தின் பின்னணியில், திபெத்தியர்கள் மீதான சீன அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளால் அவர் கோபமடைந்திருக்கலாம் என்றும், கோபத்தின் காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சீனாவின் புதிய சட்டம் குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை தெரிவித்துள்ளன. இந்தச் சட்டம், சிறுபான்மை இனக் குழுக்களிடையே ஒரு ‘பகிரப்பட்ட’ தேசிய அடையாளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





