சீன எல்லையில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை அமைப்பை கட்டமைக்கும் நேபாளம்
சீனாவுடனான தனது எல்லையில் நிலச்சரிவுகளுக்கான முன் எச்சரிக்கை அமைப்பை கட்டமைக்க நேபாளம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக நில அதிர்வு உணர்விகள், கேமராக்கள் மற்றும் ஒரு செயற்கைக்கோள் இணைப்பு நிறுவப்படும் என நேபாள அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த உபகரணங்கள், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே என்ற எல்லைக் குடியேற்றப் பகுதியில் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்பகுதியிலேயே பனிப்பாறை சரிந்து விழுந்ததாகவும், இதன் விளைவாக 1,114 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4000 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




