72 குண்டுகள் முழங்க முழு அரச மரியாதையுடன் பாக்கியராஜின் உடல் தகனம்!
மறைந்த நடிகர் மற்றும் இயக்குனர் பாக்கியராஜின் உடல் முழு அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவரது பூதவுடன் இன்று 72 குண்டுகள் முழங்க சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்ட பாக்கியராஜ் அவர்கள் தனது 72 ஆவது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகம், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது திரைத்துறைக்கான மகத்தான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு முழு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




