ஐரோப்பா முக்கிய செய்திகள்

அகதிகளுக்கான புதிய சட்ட வழிமுறைகளை அறிவித்தது பிரித்தானிய அரசாங்கம்

பிரித்தானிய அரசாங்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் அகதிகளுக்கான புதிய, வரையறுக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான சட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இதன் கீழ், பல்கலைக்கழகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அகதிகளுக்கு நிதியுதவி அளிக்க முடியும்.

உள்துறை அமைச்சகத்தின்படி, இந்த புதிய அமைப்பு கனடாவின் ஆதரவு மாதிரியைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரித்தானியாவிற்கு வர விரும்பும் அகதிகளின் விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் ஆதரவளிக்க முடியும்.

இந்தத் திட்டம் பிரித்தானியாவின் எதிர்கால அகதிகள் அமைப்பின் முக்கிய அங்கமாக மாறும் என்றும், தற்போதைய பிரித்தானிய மீள்குடியேற்றத் திட்டத்தை விட அதிகத் திறனைக் கொண்டிருக்கும் என்றும் அரசாங்கம் கூறுகிறது.

உண்மையான அகதிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதையும், கடந்த காலத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட அமைப்பில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்வதையும் இந்தப் புதிய கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, போர் மற்றும் துன்புறுத்தல்களில் இருந்து தப்பி வருபவர்களுக்கு பிரிட்டானியா எப்போதுமே அடைக்கலம் அளித்து வந்துள்ளது.

ஆனால் பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள, அந்த அமைப்பு நேர்மையாகவும், ஒழுங்காகவும், ஊழலற்றதாகவும் இருப்பது அவசியம்

ஆதாரமற்ற அல்லது அற்பமான தஞ்சம் கோரும் விண்ணப்பங்களைத் தடுக்கும் வகையில், மனித உரிமைகள் மற்றும் நவீன அடிமைத்தனச் சட்டங்களின் பயன்பாட்டில் சீர்திருத்தம் செய்யப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட மாற்றங்களின்படி, குறிப்பிட்ட குற்றவாளிகள் அல்லது போலி ஆவணங்களைப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் நவீன அடிமைத்தனச் சட்டங்களின் கீழ் பாதுகாப்பு பெறத் தகுதி பெற மாட்டார்கள்.

அரசாங்கத்தின்படி, பல்கலைக்கழக நிதியுதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என்றும், முதல் நபர்கள் 2027-ல் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகினறது.

அதே நேரத்தில் அகதிகளுக்கான வேலைவாய்ப்பு அடிப்படையிலான நிதியுதவித் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்ட வழிமுறைகளின் கீழ் தகுதிபெறும் நபர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும் என்றும், விண்ணப்பிக்கும் அனைவரும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்