பாகிஸ்தான் அணிக்கு அபராதம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஐசிசியால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி , பங்களாதேசுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையே மிர்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
எனினும், குறித்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பாகிஸ்தான் அணி மெதுவாகப் பந்துவீசியது (8 ஓவர்கள் குறைவு) தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த அணிக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவீதமும், 8 புள்ளிகளையும் அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
இதனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியில் பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளை மட்டும் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.




