ஆசியா

பொருளாதார சரிவில் இருந்து மீள இராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு விற்கும் பாகிஸ்தான்

பொருளாதார சரிவின் காரணமாக அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் பாகிஸ்தான் தேசம், அதிலிருந்து மீள்வதற்காக தேசத்தின் பாதுகாப்புக்கான ஆயுதங்களின் கையிருப்பை கரைத்து வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான போர் காரணமாக கடும் ஆயுத பற்றாக்குறைக்கு ஆளாகி இருக்கும் உக்ரைன், பல்வேறு நாடுகளிடம் இருந்தும் உதவியாகவும், விலைக்குமாக ஆயுதங்களை வாங்கி குவித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் வசமிருந்து அமெரிக்க டொலர் மதிப்பில் 364 மில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைன் விலை கொடுத்து வாங்கியதாக சர்வதேச ஊடகங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.

பாகிஸ்தான் தேசத்தின் பொருளாதாரம் தலைக்குப்புற விழுந்திருக்கிறது. திவாலாகும் சூழலில் தவித்து வரும் பாகிஸ்தான், வளைகுடா நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் நிதியுதவியை எதிர்பார்த்திருக்கிறது. அதுவரை தாக்குப்பிடிப்பதற்காக, தேசத்தின் பாதுகாப்புக்கு என இருப்பு வைத்துள்ள ஆயுதக் குவியல்களை, அவை தேவைப்படும் உக்ரைனுக்கு விற்றுள்ளது.

U.S. Aids Pakistan IMF Bailout With Secret Ukraine Arms Deal

2 அமெரிக்க நிறுவனங்கள் வாயிலாக கையெழுத்தான ஒப்பந்தங்களின் வாயிலாக இந்த ஆயுத ஏற்றுமதியில் பாகிஸ்தான் ஆதாயம் பார்த்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள விமானப்படை தளமான நூர்கானில் இருந்து பிரிட்டன் ராணுவ விமானங்கள், சைப்ரஸ் வாயிலாக ருமேனியாவை அடைந்ததாகவும், அங்கிருந்து பக்கத்து தேசமான உக்ரைனுக்குள் பாகிஸ்தான் ஆயுதங்கள் நுழைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்டில் நடந்ததாக சொல்லப்படும் இந்த ஆயுத ஏற்றுமதி விவகாரத்தை பாகிஸ்தான் கடுமையாக மறுத்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் பாகிஸ்தான் நடுநிலை வகிப்பதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளது. ஆனால் 2022-23 நிதியாண்டில் பாகிஸ்தானின் ஆயுத ஏற்றுமதி 3,000 சதவீதம் வரை எகிறி இருப்பதையும், அதற்கான பணப்பரிமாற்றங்களின் ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தானின் தரவுகளில் இருந்தும் ஊடகங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content