நெதர்லாந்தில் வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு
அந்நாட்டின் பொது சுகாதார நிறுவனமான RIVM இந்த தகவலை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு நெதர்லாந்தில் ஏற்பட்ட முதல் வெஸ்ட் நைல் West Nile வைரஸ் தொற்று இது எனவும் தற்போது 03 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் நுளம்புகள் கடிப்பதால் ஏற்படும் இந்த தொற்று பாதிக்கப்பட்ட 150 பேரில் ஒருவருக்கு கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான தாக்கத்தை ஏற்படுத்தும்.
வெப்பமான வானிலை, ஐரோப்பா முழுவதும் மேற்கு நைல் வைரஸைப் பரப்புவதற்கு நுளம்புகளுக்கு அதிக நேரத்தையும் இடத்தையும் அளிப்பதாகவும், இந்த கோடையில் கிரீஸ் மற்றும் இத்தாலியில் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




