ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய வெப்ப அலை – 32000 மரணங்கள் பதிவு

ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய வெப்ப அலை காரணமாக சுமார் 32000 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

யூரோமோமோ கண்காணிப்புத் தளம் வெளியிட்டுள்ள தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை நடுப்பகுதிக்கும் ஆகஸ்ட் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் இந்த உயிரிழப்புகள் பதிவாகியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய வெப்பத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை மதிப்பீடுகளை விட அதிகமாக  இருக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய எட்டு நாடுகளில் உள்ள தேசிய சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்ட தற்காலிக இறப்பு எண்ணிக்கையை பயன்படுத்தி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடுகளின் வரிசையில் ஜெர்மனியில் அதிகூடிய இறப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு  14,000 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸில் 7,300 கூடுதல் இறப்புகள் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, 2,877 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், ஸ்பெயினில் 4,500 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த தளத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி